Skip to main content

தமிழகத்தில் சிபிஐ (எம்) அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் 

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

cpim

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17வது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணியை முறியடித்திட மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்