Skip to main content

பிக் பாஸ் லாஸ்லியாவின் காதலுக்கு தந்தை போட்ட அதிரடி கண்டிஷன்... வெளிவந்த ரகசிய தகவல்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், லாஸ்லியாவின் காதல் விவகாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் லாஸ்லியாவின் காதல் குறித்து அவரது தோழி ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். லாஸ்லியா, கவின் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார். 
 

losliya



நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸில் பங்கேற்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது கவினும், லாஸ்லியாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இவர்களுடைய காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன்பிறகும் கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது கதறி அழுத லாஸ்லியா, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கெஞ்சினார். இதனால் அவர் கவினை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று உறுதியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி என சந்திக்க இருவருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
 

 

losliya



இதனால் லாஸ்லியா, கவின் முறிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் லாஸ்- கவின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்திருப்பதாகவும் லாஸ்லியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் இருவரும் வெளியில் பங்கு பெரும் நிகழ்ச்சியில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.