Skip to main content

மெகா ரெய்டில் சிக்காத 1340 கோடி! எடப்பாடியிடம் கதறிய சம்பந்தி சுப்பிரமணி!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
cm

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான சுப்பிரமணியை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைத்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இதற்கிடையே மற்றொரு சம்பந்தி முறை ஆகிய என்.ஆர்.கன்ஸ்டக்ரஷன்ஸ் ராமலிங்கம்.  இவரது குடும்பம் ஈரோட்டில் உள்ளது.  ராமலிங்கம் மற்றும் சுப்பிரமணி இவர்களுக்கு சொந்தமான கட்டுமான தொழில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா  என தென்மாநிலங்களில் செயல்படுகிறது.   தற்போது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில் சங்கிலி தொடர் போல எடப்பாடியின் சம்பந்தியான சுப்பிரமணி மற்றும் ராமலிங்கம் ஆகியோரின் கம்பெனிகளும் இணைந்துள்ளன.  இதை அறாய்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சுப்பிரமணியையும் ராமலிங்கத்தையும் தனித்தனியாக தூக்கிக்கொண்டு போய் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.  

 

வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் கடந்த 7 வருடமாக முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார்.  தொடர்ந்து தற்போதும் நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி வசமே உள்ளது.   ஆக, 7 வருடமும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் பெரும்பாலும் செய்யாதுரை வசமே சென்றுள்ளது.   இதில், எடப்பாடியின் சம்பந்திகளான சுப்பிரணி, ராமலிங்கத்தின் இணைவு இருந்துள்ளது.   இதைத்தோண்டி துருவிய வருமான வரித்துறை மொத்தமாக இந்த துறையில் 4500 கோடி மெகா முறைகேடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.    தற்போது செய்யாதுரையிடம் 173 கரன்சியாகவும், 214 கிலோ தங்கமாகவும் கைப்பற்றியதோடு அசையா சொத்துக்கள் பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர்.  

 

செய்யாதுரையிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சுப்பிரமணி, ராமலிங்கத்திடம் கரன்சியாக மட்டும் 1340 கோடி இருப்பதாக தெரியவந்துள்ளது.  இது எங்கே உள்ளது? இதனுடைய பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரணையை தொடரும் ஐடி அதிகாரிகள் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த தகவலையும் மத்திய அரசுக்கு இன்று கொடுத்துள்ளார்கள்.   

 

இதன் பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மொத்தமாக மத்திய மோடி அரசிடம் சிக்கியுள்ளார்.  இதன் தொடர்ச்சியாகத்தான் அவரது இன்றைய செயல்பாடு மத்திய அரசை எதிர்ப்பது போல ஒரு தோரணையை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   இந்த ரெய்டில் கணக்கில் வராத 1340 கோடி அனைத்தையும் அப்படியே சஸ்பென்சாக வைத்திருப்பதற்கான வேலைகளும் நடை பெற்று வருகிறது.   அரசியல் ரீதியாக எடப்பாடியின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக இந்த மெகா ரெய்டும் அதனை தொடர்ந்த நடவடிக்கைகளும் உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.