Skip to main content

11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
puducherry

 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த 16,485 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதி முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில்  கரோனா காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

அதேசமயம் இன்று (11.08.2020) முதல் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

 

அந்த அறிவிப்பில், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு முடிவுகள் இன்று (10.08.2020) வெளியானதை அடுத்து மாணவர்களுக்கு 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை (11.08.2020) முதல் வழங்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்