Skip to main content

கரோனா பாதித்த நபரை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
bjk

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள், தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கும், அவரின் தாய்க்கும் சில தினங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து அவரின் வீட்டிற்கு வந்த வீட்டின் உரிமையாளர், கரோனா பாதிப்புக்குள்ளான அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டியுள்ளார். கரோனா பாதித்த அந்த நபர் வீடியோ மூலம் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீட்டின் உரிமையாளரை கடுமையாக காவலர்கள் எச்சரித்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்