Skip to main content

சந்தனப்பொட்டு வைத்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கமா??!! வைரலாகிய தந்தையின் பதிவு!!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

 

mathrasa

 

 

 

கேரளாவில் உம்மர் என்பவரின் மகள் ஹீனா கேரளாவில் உள்ள மதராசா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே படிப்பு, ஆடல் ,பாடல்,நடிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்ட மாணவி ஹீனா ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்தார் என்ற காரணத்தினால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவரது தந்தை அவரது முகப்புத்தகத்தில் எனது மகள் பள்ளியிலும் சரி மதராசாவிலும் சரி நல்ல திறமைகளை வெளிக்காட்டி வருகிறாள். மதராசா சார்பில் நடைபெற்ற பொதுதேர்வில்கூட 5-ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாள் . ஆனால் ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் இப்போது மதராசாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நல்லவேளை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அவளுக்கு கொடுக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவு சில நொடிகளிலேயே வைரலாகியது. அதனை தொடர்ந்து மதராசாவையே எதிர்த்துள்ளார் மாணவியின் தந்தை என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால் சிலர் இது இஸ்லாம் மதத்தை கெடுக்கும் செயல்பாடு எனவும் பதிவிட்டனர். 

 

இதனையடுத்து தனது அடுத்த பதிவில் தான் தனது மதத்தை மதிக்கிறேன். மேலும் மனித உணர்வுகளை நேசிக்கிறேன். இதை வைத்து மத பூசலை உருவாக்க திட்டமிடாதீர்கள் என்றும் உருக்கமாக கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்; சிறுமியை ஆற்றில் தூக்கி வீசிய தந்தை

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Father throws girl into river Yamuna after talking to boyfriend

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர். இவர் தனது ஆண் நண்பருடன் பேசியிருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவரது தந்தை சிறுமியைத் திட்டியுள்ளார். அத்துடன் உடனடியாக சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சிறுமிக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், குருகிராம் செல்லும் வழியில் யமுனை ஆற்றின் மிதவை பாலத்தில் மூவரும் வந்துகொண்டிருந்த போது, தந்தை சிறுமியின் கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். பின்பு அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் அடித்துக்கொண்டு போன சிறுமியின் கதறல் கேட்டு ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். பின்னர், சிறுமி பாதுகாப்பாகக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.