Skip to main content

இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
corona

 

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருப்பினும் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடி, வரும் 8 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 96,982 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகிவுள்ளது. அதற்கு முந்தைய 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனா உறுதியாகி இருந்தது. இதன்மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 570 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 446 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்