Skip to main content

டெல்லியில் 11 பேர் தற்கொலை...மிஞ்சி இருந்த நாய் மாரடைப்பால் பலி...

Published on 23/07/2018 | Edited on 23/07/2018

 

pitbull

 

 

 

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனர். அந்த வீட்டில் உயிரழந்தவர்களால் வளர்க்கப்பட்ட டாமி என்ற நாய் மட்டுமே உயிருடன் இருந்தது. டெல்லி காவல்துறை தீவிர விசாரணையில் யாரும் இந்த 11 பேரைக் கொலைசெய்யவில்லை, தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

 

 

 

 

இந்நிலையில், இந்த குடும்பம் வளர்க்கப்பட்ட இந்திய பிட்புல் வகை நாய் மிருகங்கள் நல காப்பகத்தால் மீட்கப்பட்டு, நொய்டாவில் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்தது. முதலில் முரட்டுப்பிடித்து வந்த நாய், பின்னர் அங்கு உள்ள ஊழியர்களிடம் நன்கு பழகியது. நேற்று மாலை நான்கு மணிக்கு நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டு பண்ணை வாயிலுக்கு திரும்பினர். அப்போது டாமி திடீரென சுருண்டு விழுந்துள்ளது. மருத்துவரிடம் எடுத்துச்சென்று காட்டுகையில் நாய் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.    

    

சார்ந்த செய்திகள்