Published on 12/07/2018 | Edited on 12/07/2018

அதிகராங்களுக்கு உரிமை கொண்டாடும் ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், மாநகராட்சி அதிகராங்களுக்கு உரிமை கொண்டாடும் டெல்லி ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன். தனக்கு தான் அதிகாரம், நான் மிகப்பெரிய மனிதர் என்று கூறுபவர் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கண்டித்துள்ளது.
தற்போது டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற அதிகார சண்டை நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.