Skip to main content

கடத்தலுக்குப் பயன்பட்டதாயென விசாரிக்கும் முன்னரே... படகை மீட்டு இலங்கை அதிகாரிகள்....!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

ss

 

இராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று நள்ளிரவில் கரை ஒதுங்கியது. இலங்கை படகு கரை ஒதுங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் படகை கைப்பற்றி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரணை மேற்கொண்ட நிலையில், இலங்கையிலிருந்து வந்த அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காமால் படகினை மீட்டு இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.

 

உள்ளூர் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் சேரன் கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ள படகை கைப்பற்றி, அதிலிருந்த மீன்பிடி வலை, இரண்டு மண்ணெண்ணெய் கேன் மற்றும் சுசூகி இஞ்சினை இனம் கண்டு, குறிப்பிட்ட படகு இலங்கையின் மன்னார் மாவட்ட பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகித்தனர்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடல்வழியாக கொண்டு வருவதும் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில், தற்போது சேரன் கோட்டை பகுதியில் படகு நிறுத்தி வைத்திருப்பதால் கடத்தலில் ஈடுபட வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

 

இந்நிலையில், வியாழனன்று இலங்கையிலிருந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், "இலங்கை மன்னார் மாவட்டம் வங்காலை பகுதியிலிருந்து நேற்று இரண்டு மீனவர்களுடன் மீன் பிடிக்க வந்த படகு இது" எனக் கூறி சப்தமில்லாமல் படகினை மீட்டு சென்றுள்ளனர். மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் செய்வதறியாது திகைக்க, "இலங்கை மீனவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா" என போர்க்கொடி தூக்கியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடரும் அத்துமீறல்; மீண்டும் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
continuing trespass; 21 fishermen captured again

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை மீண்டும் கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் இரண்டு விசைப்படகு களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.