Skip to main content

சமூக விலகலைச் சாதூர்யமாகக் கடைப்பிடிக்கும் பால்காரர்... வைரலாகும் புகைப்படம்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

jh


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,500- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.


இந்தியாவில் மூன்றாவது கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்றது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. அதன்படி பெரும்பாலான இடங்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட சில இடங்களில் சமூக விலகல் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் பால் விற்பனை செய்பவர் ஒருவர் அரசு அறிவித்துள்ள தனிமனித இடைவெளியை மிக நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகிறார். அதன்படி வண்டியில் ஒரு பைப்பை சொறுகி அதில் புனல் ஒன்றை இணைத்துள்ளார். வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு வரும் அவர், அவர்களுக்கு வேண்டிய பாலை புனலில் ஊற்றுகிறார். அடுத்த முனையில் வீட்டுக்காரர் பாலை பெற்றுக்கொள்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 




 

 

சார்ந்த செய்திகள்