Skip to main content

பகவத் கீதை மதநூல் அல்ல - ஹரியானா முதல்வர் கருத்து!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

ஹரியானாவில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த, ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் பகவத் கீதை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். மேலும் பகவத் கீதை ஒன்றும் மத நூல் அல்ல. அது வாழ்க்கையின் சாராம்சங்களை விளக்கும் நூல் என்று தெரிவித்துள்ளார். பள்ளிக்குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இவை அவர்களுக்கு புரியும்படி சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்காக இலகுவான ஸ்லோகங்கள் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்த போதெல்லாம், இந்தியின் வழியாக சமஸ்கிருதத்தை நுழைக்க பாஜக முயற்சி செய்கிறது என்பதே பலரின் குரலாக இருந்தது. ஆனால், தற்போது நேரடியாக பள்ளிகளுக்குள் பகவத்கீதையை கொண்டு செல்ல முயற்சி செய்கிறது பாஜக அரசு.அண்மையில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கட்டாயப்ப்பாடமாக பகவத் கீதை சேர்க்கப்பட்டதும், கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது விருப்பப்பாடம் என்று மாற்றப்பட்டதும் கூட தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்