Skip to main content

 கேரளாவில் பிரதமர்  மோடி ஆலோசனை!

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
ம்


கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடுக்கி உள்பட எட்டு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 


        இப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களை துணை ராணுவம், தீயணைப்பு துறை, போலீசார், வனத்துறை  என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்ட மக்களை படகு, கயிறு, டோலி மற்றும் ஹேலிகாப்டர் மூலமும் மீட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.  இப்படி முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு உதவிகளுடன் தமிழகத்திலிருந்தும் நிவாரண பொருட்களும், மருத்துவ  குழுக்களும் சென்று பாதிப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து நிவாரண பொருட்களையும் வழங்கிவருகிறார்கள்.
         ஆனால் கேரள  உருவான காலத்திலிருந்து இப்படி ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதித்தது  இல்லை. அதுனால மத்திய அரசும்  தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

 

ம்

 

அதுபோல் மத்திய  அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெள்ளப் பகுதிகளை முதல்வருடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு விட்டு சென்றார்.

m


        இந்த  நிலையில் தான் பிரதமர் மோடியும் கேரளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திருவனந்தபுரம் வந்த மோடியை கவர்னரும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்றனர். அதை தொடர்ந்து இன்று காலை முதல்வர் பினராயிவிஜயனுடன் அமைச்சர்கள் மற்றும  அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசணை கூட்டம் நடத்தினார். அதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  இடங்களையும் பார்வையிட்டு விட்டு அதில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் மோடி.  இந்த நிலையில் தான் பிரதமர் மோடியும் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 500 கோடி நிவாரண நிதியும் வழங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார் அது போல் மற்ற மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு  நிவாரண உதவி கொடுக்கவும் தயாராகி வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.