Skip to main content

இளம்பெண்ணுக்கு நிர்வாண பூஜை; போலி சாமியாரின் அட்டூழியம் 

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Police arrested fake preacher who tried to perform  pooja for woman without dress

 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய முயன்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த ஹேமாவதி என்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு ஹேமாவதி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் அவரது உடல்நிலை சீராகவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில்தான் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த சாமியார் சுப்பையாவின் அறிமுகம் ஹேமாவதிக்கு கிடைத்துள்ளது. அப்போது வீட்டில் சிறப்பு பூஜை செய்தால் உடல்நிலை சரியாகிவிடும் என ஹேமாவதியிடம் சுப்பையா கூறியுள்ளார். மேலும், இந்த பூஜைக்காக ஹேமாவதியின் பெற்றோரிடம் ரூ. 20 ஆயிரம் செலவாகும் என்று கூறி முன்பணமாக ரூ. 7,500 வாங்கியுள்ளார். இதையடுத்து ஹேமாவதியின் வீட்டிற்கு சென்ற சுப்பையா மஞ்சள், குங்குமத்தால் கோலமிட்டு அதில் ஹேமாவதியை நிர்வாணமாக அமரச் செல்லியுள்ளார். ஆனால், இதற்கு ஹேமாவதி மறுப்பு தெரிவிக்க, சுப்பையா அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட ஹேமாவதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையறிந்த சுப்பையா தப்பி ஓட முயன்ற போது அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்