Skip to main content

இடைவெளிக்கு பிறகு வெளிநாடு புறப்படும் பிரதமர் மோடி!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

pm modi

 

 

இந்திய பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணங்களுக்காக எதிர்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அதன்பிறகு வெளிநாட்டு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் கரோனா பரவலால் பிரதமர் மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.

 

இந்தநிலையில் வங்கதேசதின் 50வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி அந்தநாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. இந்தியாவின் உதவியால் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் எனும் தனிநாடாக மாறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த சுற்றுப்பயணம் மூலம் 15 மாதங்களுக்குப் பிறகு அந்நிய மண்ணில் காலடி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மார்ச் 25 மற்றும் 26 தேதிகளில் வங்கதேச சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்