Skip to main content

இந்தியாவில் மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று... ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் பாதிப்பு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

k



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் தொடக்கத்தில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 172 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 17,741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்