Skip to main content

உத்தரப்பிரதேசம் : நாட்டிலேயே அதிக இனக்கலவரங்கள் நடக்கும் மாநிலம்!

Published on 15/03/2018 | Edited on 15/03/2018

நாட்டிலேயே அதிகபட்சமான இனக்கலவரங்கள் நடக்கும் மாநிலம் என உத்தரப்பிரதேசம் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Communal

 

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆகிர் நாடு முழுவதும் நடைபெற்ற இனக்கலவரங்கள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், 2017ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 822 இனக்கலவரங்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டில் 703 மற்றும் 2015ஆம் ஆண்டு 751 இனக்கலவரங்கள் நடந்துள்ளன.

 

கடந்த ஆண்டைப் பொருத்தமட்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 195 இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா (100), ராஜஸ்தான் (91), பீகார் (85), மத்தியப்பிரதேசம் (60) மற்றும் இதர மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

 

2016ஆம் ஆண்டிலும் உத்தரப்பிரதேசம் மாநிலமே முதலிடத்தில் (162) இருந்தது. மதம், நிலம் மற்றும் சொத்துக்கள், பாலின விவகாரங்கள் மற்றும் சமூக வலைதள விவகாரங்கள் ஏற்பட்ட கலவரங்களை இனக்கலவரங்களாக எடுத்துக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.