Skip to main content

ரஃபேல் விவகாரம்; நாங்கள் பேசமாட்டோம், ஆதாரங்கள் பேசும்- 'இந்து' என்.ராம்...

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது.

 

ram

 

அப்போது ஊடகங்களில் வெளியான ஆதாரங்கள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆதாரங்களை வெளிகொண்டுவந்த இந்து பத்திரிகை குழும தலைவர் என்.ராம் இது பற்றி கூறுகையில், "உச்சநீதிமன்றத்தில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள். இந்த ஆவணங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது.

எனவே, பொதுநலன் கருதி இந்த ஆவணங்களை வெளியிட்டோம். பொதுநலன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான விவகாரங்களையும் புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆதாரங்களை எங்களுக்கு வழங்கியது யார் என மத்திய அரசு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் நாங்கள் அதனை சொல்ல மாட்டோம். அவர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்கின்படி அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் ஏதும் பேச விரும்பவில்லை. நாங்கள் வெளியிட்ட ஆதாரங்கள் பேசும்" என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஃபேல் விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்?.. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கிய இடைத்தரகர்?

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

RAFALE

 

ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

 

இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரான்ஸின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் நாட்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

 

இந்தநிலையில், மீடியாபார்ட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், 2007 - 2012ஆம் ஆண்டுவரை, இந்தியாவிற்கு ரஃபேல் விமானங்களை விற்க வழிவகை செய்ய இடைத்தரகராக செயல்பட்ட சுஷேன் குப்தா என்பவரின் இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு, போலியான விலை விவரப்பட்டியல் மூலம் ஃபிரான்ஸ் நாட்டின் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 65 கோடி ரூபாயை கமிஷனாக அளித்தது என கூறியுள்ளது. டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம்தான் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் போலியான விலை விவரப்பட்டியல் மூலம் இடைத்தரகருக்கு கமிஷன் அளிக்கப்பட்டது தொடர்பான ஆதாரம், இந்தியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் 2018ஆம் ஆண்டு முதலே இருந்துவருகிறது என்றும், ஆனால் இரண்டு அமைப்புகளும் இந்த விவகாரத்தை தொடர வேண்டாம் என முடிவுசெய்து, போலி விலை விவரப் பட்டியல் குறித்து விசாரணையைத் தொடங்கவில்லை எனவும் மீடியாபார்ட் கூறியுள்ளது.

 

இதற்கிடையே 2007 - 2012 ஆம் ஆண்டு என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலம் என்பதையடுத்து, மீடியாபார்ட் நிறுவனத்தின் செய்தியைச் சுட்டிக்காட்டி பாஜக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஐ.என்.சி (INC- இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் 'எனக்கு கமிஷன் தேவை' என அர்த்தம். இது மிகையான ஒன்றாக இருக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்குள்ளும் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஆனாலும் அவர்களால் ஒப்பந்தம் போட முடியவில்லை" என கூறியுள்ளார்.

 

மேலும், “ரஃபேல் போர் விமானம் குறித்து நீங்களும் உங்கள் கட்சியும் ஏன் இத்தனை ஆண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்த முயன்றீர்கள்?” என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

மீண்டும் சூடு பிடிக்கும் ரஃபேல் விவகாரம்: விசாரணை வளையத்தில் ஃபிரான்ஸ் அதிபர்!  

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

narendra modi - emmanuel macron

 

ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

 

இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரான்ஸின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டது. இதனையடுத்து, ரஃபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு உற்பத்தி செய்யும் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கமளித்து.

 

இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இணைய ஊடகமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீடியாபார்ட், ஜூன் 14ஆம் தேதியே விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும், ஃபிரெஞ்சு பொது வழக்கு சேவைகளின் நிதிக் குற்றப்பிரிவு இதனை உறுதிசெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

 

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அதிபராக இருந்த பிரான்சுவா ஹாலண்டின், அப்போது பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆகியோரின் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளைப் பற்றியுள்ள கேள்விகளும் விசாரிக்கப்படும் என மீடியாபார்ட் கூறியுள்ளது.