Skip to main content

32 நாட்கள் போராட்டத்திற்கு பின் 160 அடி ஆழத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்; மேலும் 14 பேரின் உடல்கள்...

Published on 17/01/2019 | Edited on 17/01/2019

 

yhjdf

 

மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க சரிவில் கடந்த மாதம் 15 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினார். இந்த சுரங்கம் முறையான அனுமதியின்றி செயல்பட்டுவந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பலதரப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்திய கடற்படை மேற்கொண்ட மீட்பு பணியில் இன்று காலை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 160 அடி ஆழத்தில் தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தினுள் மாட்டிக்கொண்ட மேலும் 14 பேரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

 

  
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆங்கிலம் தெரியாததால் மாணவனுக்கு காலணி மாலை; ஆசிரியரின் கொடூரச் செயல்!

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Meghalaya Teacher forced girl  wear shoelaces for failing to speak English

 

மத்திய மாநில அரசுகள் அனைத்து மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது ஒருபுறமிருக்க மேகாலயாவில் ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் அருவருக்கத்தக்கச் செயலை செய்துள்ளார். 

 

மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆங்கிலம் பேசத் தெரியாமல் மாநில மொழியில் பேசியுள்ளார். அதனால் அப்பள்ளியின் ஆசிரியர் அந்த மாணவனைத் தண்டிக்கும் விதமாக அவரின் கழுத்தில் அழுக்கு அடைந்த செருப்பு மாலை அணிவித்து சக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் முன்னிலையில் பரேட் செய்ய வைத்துள்ளார். தனக்குப் பள்ளியில் நடந்ததை மாணவர் தன்  பெற்றோரிடம் கூறியுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து, “பள்ளியின் இந்த செயல் மிகவும் தவறானது, சட்ட விரோதமானதும் கூட. ஆசிரியரின் அந்த செயலால் எனது மகன் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மாணவரின் பெற்றோர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ரக்கம் ஏ. சங்மா, ‘சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையரிடமும், கல்வி அதிகாரியிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

இந்தியில் உரையாற்றிய ஆளுநர்; சட்டமன்றத்தில் சலசலப்பு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

meghalaya governor budget session hindi issue in assembly 

 

சமீபத்தில் நடந்து முடிந்த மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கான்ராட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. தற்போது மேகாலயாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் அம்மாநில ஆளுநர் பாகு சவுகான் உரையுடன் தொடங்கியது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும் போது ஹிந்தியில் உரையாற்றினர். அப்போது மக்களின் குரல் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மக்களின் குரல் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அர்த்தன் மில்லர் பேசுகையில், "மேகாலயா ஹிந்தி பேசும் மாநிலம் அல்ல. அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது மொழியின் அடிப்படையில் பிரிந்த மாநிலம் தான் மேகாலயா. எங்களுக்கும் எங்கள் மாநில மக்களுக்கும் புரியும் வகையில் தான் ஆளுநர் பேச வேண்டும்" என்றார்.

 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர், "ஆளுநரால் ஆங்கிலத்தில் உரையைப் படிக்க முடியாது. அதனால் அவர் ஹிந்தியில் படித்தார். இருப்பினும், ஆளுநர் உரையானது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை பெரிதுபடுத்த வேண்டாம்" என்றார்.

 

இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேகாலயாவில் ஆங்கிலமானது அலுவல் மொழியாக உள்ள நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் இந்தியில் உரையாற்றியது பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.