Published on 05/12/2018 | Edited on 05/12/2018
![mal](http://image.nakkheeran.in/cdn/farfuture/kvkMdGYhffwJHQ500ceZ8iACUBpbZzZnB_9ZmqIqPxY/1544005492/sites/default/files/inline-images/Vijay-Mllya-in.jpg)
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா தான் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த தயார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த ட்வீட்டில் அவர், இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலை, விமான நிறுவனங்களை நான் நடத்தினேன். மிக அதிகமான கச்சா எண்ணெய் விலை காரணமாக விமான நிறுவனம் நஷ்டமடைந்து. அப்படியிருந்தும் நான் வாங்கிய அசல் தொகையை கட்ட சம்மதித்தேன். ஆனால் அரசாங்கமும், வங்கிகளும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.