Skip to main content

கேரளாவில் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் நீரில் முழ்கியதால் மாணவர் தற்கொலை... 

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
hanged

 

கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி  தொடங்கிய மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. இதனால் பல அணைகள் நிறம்பிய நிலையில், திறக்கப்பட்டன. பலத்த மழையினால் வெள்ளமும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பலர் வீட்டை விட்டு வெளியேறி, மிட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  7.14 லட்சம் பேர் மிட்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கோழிக்கோட்டின் கரந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ்(19). கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முகாமில் தன்னுடைய பெற்றோறுடன் தஞ்சம் புகுந்துள்ளார். இவருக்கு தொழிற்பயிற்சி மையத்தில் சேர அனுமதியும் கிடைத்துள்ளது. வீட்டில் நீர் வடிந்த பிறகு கைலாஷ் வீட்டை வந்து பார்த்துள்ளார். அப்போது அவருடைய 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் நீரில் முழ்கியிருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டை சுத்தம் செய்வதற்காக கைலாஷின் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது கைலாஷ் துக்குபோட்டநிலையில் மரணமடைந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

தென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.  

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI


இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

 

KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். 

 

 

 

 

 

Next Story

ஒன்றாக புதைக்கப்பட்ட சிறுமிகள்! உருக்கமான பின்னணி!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

 

சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் இறுதிநிகழ்வு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக மாறியிருக்கிறது.

 

k

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர். இங்குள்ள கவலப்பாறா எனும் மலைக்கிராமத்தில் முத்தப்பன்குன்னு என்ற மலைச்சரிவுகளில் ஏராளமானோர் குடியிருந்து வந்தனர். அந்தக் குடியிருப்புகளிலேயே உச்சியில் விக்டர் மற்றும் தாமஸ் ஆகிய சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் சிறிய வீட்டில் வசித்து வந்தனர். இந்த ஐந்து குழந்தைகளுமே ஒரே படுக்கையில், ஒன்றாக கட்டிக்கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

 

கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, கடுமையான நிலச்சரிவால் அந்தப்பகுதி பாதிப்புக்குள்ளானது. இதில் விக்டர் – தாமஸின் வீடு மோசமாக தாக்கப்பட்டது. நிலைமையின் தீவிரமுணர்ந்து குழந்தைகளை மீட்கச் சென்றபோது, 2 மாத கைக்குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டனர். சிறுமிகளான அலீனா மற்றும் அனகா ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

a

 

அலீனாவின் அழுகுரல் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது இரவு முழுவதும். மிகவும் ஆபத்தான சூழலில் மணிக்கணக்காக தோண்டித் தேடியும், குழந்தைகள் மீட்கப்படவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை காலை அனகாவை மீட்டபோது, அவளுக்கு உயிரிருப்பதாகவே எண்ணினார்கள். ஆனால், மேற்கொண்டு அவளைக் காப்பாற்றுவதற்கான எந்த வழியும் அங்கே அமையவில்லை. தொலைத்தொடர்பு, சாலை இணைப்புகள் என அனைத்துமே துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவமனை கொண்டுசென்றபோது அனகா உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்கள் மருத்துவர்கள்.

 

அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை, அலீனாவின் அழுகுரல் கேட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தீவிர தேடுதல் பணியில், அலீனா சடலமாக மீட்கப்பட்டாள். இந்த நிலச்சரிவில் இருந்து மட்டும் தற்போதுவரை இந்த சிறுமிகள் உட்பட 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 55 பேரின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

எவ்வளவோ போராடியும் சிறுமிகளை காக்க முடியவில்லையே என்று அவர்களின் குடும்பத்தினர் கதறியழுதனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அலீனா மற்றும் அனகாவின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு பூதானம் பகுதியிலுள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இருவரும் எப்போதுமே கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்குபவர்கள் என்பதால், தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்து, அவற்றை ஒரே குழியில் புதைத்தனர். இதை பார்த்து பலரும் கதறியழுத சம்பவம் நெஞ்சை உறையச் செய்திருக்கிறது.