Published on 02/09/2021 | Edited on 02/09/2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
நேற்று அம்மாநிலத்தில் 32,803 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் கேரளாவில் இன்றும் 32,097 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் தற்போது 18.41 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.