Skip to main content

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்குச் சிறை!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Jail for Narmada Bachao Andolan activist Medha Patkar

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தவரும், தற்போதைய டெல்லியின் துணைநிலை ஆளுநராக உள்ள வினய் குமார் சக்சேனா சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேதா பட்கருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி கே சக்சேனாவுக்கு 10 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து வி.கே.சக்சேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழப்பீடு எதுவும் தேவையில்லை. அந்த நிதியை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் (டி.எல்.எஸ்.ஏ.) கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேதா பட்கருக்கு அனுமதி அளிக்கும் வகையில் டெல்லி சாகேத் நீதிமன்றம் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கர் கருத்து தெரிவிக்கையில், “உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. யாரையும் அவதூறு செய்ய முயற்சிக்கவில்லை. எங்கள் வேலையை மட்டுமே செய்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவால் செய்வோம்”எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Airport roof collapse incident

டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள்,  ரயில் நிலையம்,  மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன.  இத்தகைய சூழலில் தான் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவலை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் அதுல் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விமான  பயணி ஒருவர் கூறுகையில், " நான் பயணிக்க உள்ள விமானம் காலை 9 மணிக்கு  புறப்பட  உள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததை அறிந்தேன். இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து யாஷ் என்ற பயணி கூறுகையில், "பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு  காலை 08 : 15 மணிக்கு விமானத்தில் வந்தேன். இங்கு காலை 05 : 00  - 05 : 15 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது எனக் கேள்விப்பட்டேன்” எனத் தெரிவித்தார்.