Skip to main content

சாமியார் சொன்ன பூஜை! சம்மதிக்க மறுத்த பெண்ணை நீரில் மூழ்கடித்து கொன்ற கணவன்!      

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

    


சாமியாருடன் தவறான தொடர்புக்கு கணவனே மனைவியை வற்புறுத்தி வந்த நிலையில் அதற்கு உடன்பட மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த கொடுங் கொலை சம்பவம் ஆன்மீகத்திற்கு புகழ் பெற்ற கங்கை நதி ஓடும் உ.பி.யில் தான் நிகழ்ந்துள்ளது.  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் மான்பால் சிங். கூலி தொழிலாளி.  பக்தியில் அதிக நாட்டம் கொண்ட மான்பால் சிங்கிற்கு அவ்வூர் அருகே இருந்த  சாமியார் சந்தாஸ் என்பவருடன்  அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

 

உ


பல மணி நேரம் கஞ்சா போதையிலேயே மிதக்கும் சாமியார் சந்தாஸ், மான் பால் சிங்கிடம் "கஞ்சா அடித்தால் உலகத்தையே மறக்கலாம். மனம் வேற்று கிரகத்திற்கு பயணமாகும். அங்கு கடவுளை நேரில் காணலாம். அவ்வளவு பக்தியும் பரவசமும் கஞ்சா போதையில் இருக்கிறது. இதோ ஒரு முறை நன்றாக புகையை இழுத்துவிடு" என மான் பால் சிங்கை கஞ்சா குடிக்க வைத்துள்ளார். நாளடைவில் சாமியாரிடம் கஞ்சா போதைக்கு அடிமையானார் மான் பால்சிங்.


சில நாட்கள் கழித்து உன் மனைவியை அழைத்து வா கடவுள் என்ன கட்டளை போடுகிறார் என்பதை கூறுகிறேன் என்று கூற,  மான் பால் சிங் தனது மனைவியான ரஜ்னியை சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.  அப் பெண்னை கஞ்சா போதையில் வைத்த கண் வாங்காமல் பார்த்த சாமியார் சந்தாஸ், கடவுளிடம் பேசுகிறேன். மீண்டும் நாளை அழைத்து வர வேண்டும் என கூறியிருக்கிறார். 

 

அடுத்த நாள் காலையில் சாமியாரிடம் மான்பால்சிங் நேரில் செல்ல,  கஞ்சா புகையை கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, கடவுள் உத்தரவுப்படி நீ மிகப் பெரிய பணக்காரனாக மாறப் போகிறாய். ஆனால் அதற்கு கடவுளுக்கு ஒரு அபிஷேகம் செய்ய வேண்டும் என சாமியார் கூற,  என்ன அபிஷேகம் சொல்லுங்கள் என மான்பால்சிங் கேட்க,  என்னோடு உன் மனைவியை உறவு வைத்துக் கொள்ள வைக்க வேண்டும் என அப்பட்டமாக கேட்டுள்ளார் சாமியார். 

 

கஞ்சா போதை அடிமையான மான் பால்சிங் அடுத்த நொடியே உடனடியாக கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.  எப்போது வேண்டுமானாலும் என் மனைவியுடன் நீங்கள் இருக்கலாம் என கூறி விட்டு வீட்டுக்குச் சென்ற மான்பால்சிங்,   மனைவி ரஜ்னியிடம் சாமியார் கடவுள் அவதாரம்.  நாம் மிகப் பெரிய பணக்காரனாக மாறப் போகிறோம்.  அதற்கு சாமியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  நீ சாமியாருடன் உறவு வைக்க வேண்டும் என கூற,  அதிர்ந்து போன மனைவி ரஜ்னி,  இதை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் நாள் முழுக்க தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான் மான்பால் சிங். 

 

வேறு வழி இல்லாமல் இதனை ரஜ்னி தனது சகோதரிடம் கூற, அவர் மான்பாலை கடுமையாக எச்சரித்துள்ளார். இந்நிலையில், கங்கை நதியில் பூஜை செய்யலாம் என கூறி மனைவி ரஜ்னியை அழைத்துச் சென்ற மான்பால்,  சாமியாருடன் கள்ள உறவுக்கு மறுத்த அப்பாவி பெண்ணை கணவனே நீரில் மூழ்கடித்துக்கொன்றுள்ளான்.

 

 இதையடுத்து, ரஜ்னியின் சகோதரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  புகாரின் பெயரில் கங்கை நதியில் தேடுதல் நடத்தி ரஜ்னியின் சடலத்தை போலீசார் மீட்டனர். மேலும், கொலைக்குற்றம் தொடர்பாக மான்பால் மற்றும் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த  சாமியார் ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்துக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

கடவுள், பக்தி, ஆன்மீகம் என்பதில் நேர்மையற்ற கும்பல் சாமியார் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுவது நாடு முழுக்க பெருகிவிட்டது.
 

சார்ந்த செய்திகள்