Skip to main content

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்!

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

nn

 

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.

 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்(100). அண்மையில் நடந்து முடிந்த  குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் 'தாயாரை இழந்து வாழும் பிரதமரும் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்

 

 

சார்ந்த செய்திகள்