Skip to main content

சுதந்திர தினத்தன்று மோடிக்கு பேச எதுவும் இல்லை: ராகுல்காந்தி

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
சுதந்திர தினத்தன்று மோடிக்கு பேச எதுவும் இல்லை: ராகுல்காந்தி 

காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி இந்தியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக அவர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன் என்று அறிவித்தார். ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வேலைவாய்ப்புகளையே அவர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சுதந்திர தினத்தன்று மோடி பேசுவதற்கு ஒன்றுமே இல்லாததால் தான், வெறும் 57 நிமிடங்களில் தன் உரையை நிறுத்திக்கொண்டார். அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் பேச அவருக்கு எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்