Skip to main content

ரயில் நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
Incident happened in maharashtra

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் பாந்த்ரா ரயில் நிலையத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார், அந்த இளம்பெண்ணிடம் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். அதில், அந்த இளம்பெண் கடந்த 7ஆம் தேதி உறவினர் ஒருவரை வரவேற்க பாந்த்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். வெகு நேரமாகியும், அந்த உறவினர் வராததால் பயத்தில் இருந்த அந்த இளம்பெண்ணிடம், 31 வாலிபர் ஒருவர் தனது காரில் லிப்ட் தருவதாகக் கூறி அந்த பெண்ணை ஏற்றியுள்ளார். காரில் ஏறிய பெண்ணை, அந்த வாலிபர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணை மீண்டும் பாந்த்ரா ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் பேரில், மும்பை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் தருவதாகக் கூறி இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்