Skip to main content

“மோடியின் கருத்துக்கு செவி சாய்த்து முதன்மை மந்திரி இதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” - திமுக எம்.எல்.ஏ சிவா வேண்டுகோள்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

DMK MLA Siva urges minister to listen to Modi voice and take action seriously

 

பிரதமரின் அறிவுறுத்தல்படி செயல்பட ஏதுவாக காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என புதுச்சேரி (தெற்கு) மாநில அமைப்பாளரும், திமுக எம்.எல்.ஏவுமான சிவா, பாஜக அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காதி மற்றும் கிராம தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் திட்டமிடுவது, அத்தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பது, காதி மற்றும் கிராம தொழில்களை அமைப்பதன் மூலம் தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது, அத்தொழில்களின் வளர்ச்சிக்கு கடன்களை வழங்குவது, அத்தகைய தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கருவிகளை வழங்குவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கண்காட்சிகளாக வைப்பது, விற்பனை செய்து தருவது, அதற்காக அரசிடம் மானியம் பெற்று அப்பொருட்களுக்குத் தள்ளுபடி வழங்குவது ஆகிய பணிகளை செய்வதற்காக பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியம் உருவாக்கப்பட்டது. 

 

ஆனால், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முடங்கியுள்ளது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போது 7 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தள்ளுபடி தொகை ரூ. 4.5 கோடி, பல ஆண்டுகளாக வாரியத்திற்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகைதான் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி உள்ளிட்டவற்றை வாரியம் வழங்க உதவியாக இருக்கும். அரசு வழங்காததால் இதையும் வாரியம் செய்ய முடியவில்லை. புதுச்சேரி கதர் வாரிய தொழிலாளர்களுக்கு இ.பி.எஃப், இ.எஸ்.ஐ, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டு மட்டுமே 9 பேர் இறந்துள்ளனர். இன்சூரன்ஸ் பிரிமியம் தடையின்றி செலுத்தப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 7 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைத்திருக்கும். அதுவும் கிடைக்காமல் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எதிர்காலத்தில் இந்நிலை தொடராமல் இருக்க உடனடியாக அரசு இன்சூரன்ஸ் பிரிமியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் உள்ளிட்ட நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும்.

 

இந்த வாரியம் சிறப்பாக செயல்பட தொடங்கினால் இளைஞர்கள் கதர் தொழிலில் வேலைவாய்ப்பு பெறுவர். அவர்களது கதர் பொருட்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே புதுச்சேரி காதி மற்றும் கிராம தெழில் வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அரசு தர வேண்டிய நிதிகளை முழுமையாக கொடுத்து, சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டும்.  பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும்போது காதி பொருட்களை வாங்குவது தேசத்துக்கு ஆற்றும் சேவை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், புதுச்சேரியில் கதர் பொருட்களை உற்பத்தி செய்வதே, வாரிய செயல்பாட்டின் முடக்கத்தால் முடங்கிப்போய் உள்ளது. எனவே பிரதமரின் கருத்துக்கு செவி சாய்த்து, புதுச்சேரியில் ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் பாஜகவின் முதன்மை மந்திரியாக இருப்பவர் இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு, சம்பளமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பிரதமரின் கூற்றுப்படி மக்களுக்கு கதர் பொருட்களைக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதால், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.