Published on 06/09/2018 | Edited on 06/09/2018
![TELUNGANA](http://image.nakkheeran.in/cdn/farfuture/isXoI-zMUHStMIW1EB0DrO2b3GCw9nNNpRXqcuBcGdg/1536242176/sites/default/files/inline-images/1490340721-ap-assembly_0.jpg)
119 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தெலுங்கானாவில் 63 தொகுதிகளில் வெற்றிபெற்று சந்திரசேகரராவ் அங்கு ஆட்சிசெய்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பதற்கு சந்திரசேகரராவ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தெலுங்கானா சட்டப்பேரவைக்கு பதவிக்காலம் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தெலுங்கானா சட்டப்பேரவையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநரிடம் முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கி உள்ளார்.