Skip to main content

பேருந்து தீப்பிடித்து 11 பேர் உயிரிழப்பு

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

bus fire incident in maharastra

 

மகாராஷ்டிராவில் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹவுரங்காபாத் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கண்டெய்னர் லாரியும் இன்று அதிகாலை மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் 30 பேர் பயணித்த நிலையில் இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்