Skip to main content

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Advocate R Venkataramani appointed as new Attorney General of India

 

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1- ஆம் தேதி முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76 (1) பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணியை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்