Skip to main content

நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி: முதல்வர் பாராட்டு

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி: முதல்வர் பாராட்டு

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துர்கா நகர். சேரி பகுதியான இங்கு வசிக்கும் முஷ்கன் அகிர்வர்,11 என்பவர் நூலகம் நடத்தி வருகிறார். கடந்த வருடம், 25 புத்தகங்களுடன் துவக்கப்பட்ட இந்த நூலகம், தினமும் பள்ளி முடிந்த பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும். தனது பகுதியில் வசிக்கும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நூலகம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

சிறுமியின் இந்த சேவையை அறிந்த முதல்வர் சவுகான், நேரில் சென்று முஷ்கினை பாராட்டி ரூ.2 லட்சத்திற்கான செக்கை வழங்கினார். நூலகத்திற்காக ஒரு அறை கட்டி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.முதல்வர் கூறுகையில், முஷ்கன் போன்றவர்கள் நாடு முழுதும் சேவை செய்யும் போது, நமது நாட்டின் நிலைமாறும். அவருக்கு தேவையான அனைத்து உதவியையும் மாநில அரசு செய்யும். இவ்வாறு கூறினார்.

சிறுமி முஷ்கன் கூறுகையில், ஆரம்பத்தில் 25 புத்தகங்களுடன் நூலகத்தை துவக்கினேன். தற்போது ஆயிரம் புத்தகங்களுடன் நூலகம் வளர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 7 ல் எனது தந்தை மனோகர் அஹிர்வர் காலமானபோது நூலகம் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது முதல்வர் உதவியை தொடர்ந்து நூலகம் தொடர்ந்து நடத்துவதையும், நூலகத்தால் குழந்தைகள் தொடர்ந்து முன்னேறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. எனது தந்தை என்னிடம் பெரிதாக செய். கடுமையாக உழைக்க வேண்டும் எனக்கூறுவார். நான் எதிர்காலத்தில் டாக்டராக விரும்புகிறேன். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்