Skip to main content

இறந்துவிட்டதாக நினைத்த கணவன் பின் சீட்டில் முனகல்; காதலனுடன் காரில் உல்லாச பயணம் செய்த இளம்பெண் திடுக்!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
pra


    

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை என்னும் இடத்தில் கடந்த மாதம் 18ம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு காஞ்சிப்பட்டா, பாலக்கபாடியைச் சேர்ந்த முகமது சமீர் என்பது தெரிய வந்தது. அவர் அரபு நாட்டில் இன்ஜினியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

 

இந்த விசாரணையில் அவருடைய மனைவி பிரதோஸ், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது மங்களூரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது சமீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி பிரதோஸ், 6 மாத ஆண் குழந்தையுடன் பெங்களூருவுக்கு காரில் சுற்றுலா சென்றார். அந்த காரை, முகமது யாசிக் ஓட்டினார். இந்த நிலையில் பிரதோஸ், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவர்களை பிடிக்க தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பிரதோஸ், கள்ளக்காதலுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 

டிரைவர் யாசிக்

you

 

பெங்களூரு கப்பன்பார்க் பகுதியில், பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கைதான 2 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது... முகமது சமீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார். இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிரதோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார். பெற்றோர் வீட்டின் அருகே டிரைவர் முகமது யாசிக்கின் சித்தி வீடு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பிரதோசின் தந்தை ஜாசத்உசேன் கண்டித்துள்ளார்.  ஆனாலும் அவர்களுடனான காதல் தொடர்ந்தது.  இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி முகமது சமீர் சொந்த ஊருக்கு வந்தார். 15ந் தேதி காரில் அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். காரை முகமது யாசிக் ஓட்டினார். அப்போது முகமது சமீரை கொலை செய்ய பிரதோஸ் முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். 

 

இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அவரை இறந்துவிட்டதாக நினைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து விட்டு,  கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர். அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அது முடியாமல் போகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர். அப்போது ஓசூர் அருகே வந்த போது குழந்தை அழுத சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார்.

 

பின்னர் கொடைக்கானல் மலைப்பாதையில் பட்டறைப் பாறை அருகே வைத்து 2 பேரும் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பிரதோசிடம்,  முகமது சமீர் தம்பி,  அண்ணன் எங்கே? என்று கேட்டுள்ளார்.  அங்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு  முகமது யாசிக்குடன் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் பிரதோசஸ்.  பின்னர் பெங்களூருவுக்கு வந்த போது போலீசில் அவர்கள் சிக்கி கொண்டனர் என்று அவர் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானல் பள்ளி மாணவன் கொலையில் வெளிவராத மர்மங்கள்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு அருகே செயல்பட்டு வரும் பாரதிய வித்யா பவன்'ஸ் காந்தி வித்தியாஸ்ரம் என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த கபில்ராகவேந்திரா என்ற மாணவனை உடன் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்து, கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் இன்னும் பல மர்மங்கள் வெளிவராமல் உள்ளது.   

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து கொலை செய்த மாணவன் ஸ்ரீஹரியை கைது செய்து சேலம் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். பலியான மாணவன் கபில் ராகவேந்திரன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலையில் ஈடுபட்ட மாணவர் மீது ஏற்கனவே பல மாணவர்கள் புகார் தெரிவித்து இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தீய பழக்கவழக்கங்கள் கொண்டிருந்த அந்த மாணவன் ஆசிரியர்களையும் மரியாதை குறைவாக பேசும் பழக்கமும் உடையவன். அவனது மற்ற பழக்கவழக்கங்கள் என்ன என்பது அவனுடன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். கொலை செய்யப்பட்ட கபில் ராகவேந்திராவும், ஸ்ரீஹரியும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்தபோது அவரது நடவடிக்கை பிடிக்காததால் கபில் ராகவேந்திரா அந்த மாணவனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளான்.

சம்பவம் நடந்த அன்று மாலையில் இருவரும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இரவு 8 மணிவரை அங்கு இருந்த மாணவர் கபில் ராகவேந்தரை அந்த மாணவர் கொலை செய்துள்ளார். அங்குள்ள கழிப்பிடம் அருகே கபில் ராகவேந்திரா பிணமாக கிடந்தார். அந்த கழிப்பிடம் மாணவர்கள் விளையாடும் சமயத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பகுதி ஆகும். இதனால் மாலை பள்ளி முடிந்து விடுதிக்கு சென்ற மாணவர்கள் இங்கு வரவில்லை. இரவு 8 மணிக்கு சாப்பிடச் செல்லும்போது அனைத்து மாணவர்களும் வந்துவிட்டார்களா என்பதை விடுதிக்காப்பாளரும் கவனிக்கவில்லை. மேலும் இரவு 11 மணி வரை இரண்டு பேரும் தூங்குவதற்கும் வரவில்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. 

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

கொலை செய்துவிட்டு அந்த மாணவர் பள்ளி காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வெளியேறினான். பின்னர் கொடைக்கானல் விளக்குப் பகுதியில் சுற்றிக் திரிந்த அவன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளான். ஆனால் ஏரி அருகே இரவு 11 மணிக்கு ஸ்ரீஹரி அங்கிருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்க நினைக்க பள்ளி சீருடையில் இரவு 11 மணிக்கு தனியாக வந்த மாணவன் அறை எடுத்து தங்க வேண்டும் என கூறியதால் சந்தேகம் அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 Mysteries not revealed in Kodaikanal school student's incident

 

அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்திய போதுதான் கபில் ராகவேந்திராவை கொலை செய்யப்பட்ட விவரமே தெரிய வந்தது. மாணவர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் அவர்கள் முறையாக விடுதிக்கு வருவார்களா சாப்பிட்ட பின் தங்கள் அறையில் வந்து தங்குகிறார்களா என்பதையும் கண்காணிப்பதில்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற தனியார் பள்ளி பள்ளிகள் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. 

விடுதியில் அஜாக்கிரதையாக இருந்த காப்பாளர் உள்பட பணியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கபில் ராகவேந்திரா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதற்கான உண்மையான விவரத்தை அவரது பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசாரின் கடமை  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.