Skip to main content

தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 16/02/2018 | Edited on 16/02/2018
cauvery


காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய காவிரி மேலாண்மை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்வழக்கு விசாரணையின் போது நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு அமைக்க மறுத்துவிட்டது. விசாரணையின் இடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பல இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய காவிரி மேலாண்மை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு தரப்படும் நீரின் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் 264 டிஎம்சி நீர் கேட்ட நிலையில், 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த அளவை விட குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

''காவிரி ஆணையத்தின் முடிவு தமிழகத்திற்கு பாதகமானது''- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
admk

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று பேரவையில் கொண்டுவரப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடகா ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. மேகதாது அணையை கொண்டு வருவோம் என கர்நாடகா அரசு பேசலாம், ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது திட்டத்திற்கு இசைவு தர மாட்டார்கள்'' என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கூச்சலிட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனை குறித்த அமைச்சர் துரைமுருகனின் விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், வெளியே வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,  ''இன்று சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28 வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்திற்கு பாதகமானது. இதை நான் சுட்டிக்காட்டினேன். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு படி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கு மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் அதிகாரம் உண்டு என ஆணையத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணையின் செயல்பாட்டை கண்காணித்தல் மற்றும் நீரை பாசன தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல் தான் அதன் பணிகள். தி.மு.க ஆட்சியில் ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28 வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அனுமதிக்க விட்டார்கள். மேகதாது அணை விவாதம் நமது எதிர்ப்பை மீறி செயல்பட்டு இருந்தால் உடனடியாக அதிகாரிகள் என்ன செய்திருக்க வேண்டும்.. அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.இது தமிழகத்திற்கு பாதகமான நிலையை உருவாக்கும்'' என்றார்.

Next Story

கர்நாடகா அரசைக் கண்டித்து ரயில் மறியல்; 22 பேர் கைது

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Rail strike condemns Karnataka government; 22 people were arrested

 

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், நீர் திறந்து விட வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

ரயில் நிலைய நுழைவு பகுதியில் போலீசார் பேரிங் கார்டு வைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காளை மாட்டு சிலை அருகே தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு கர்நாடகா அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ஈரோடு ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அங்கு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 2 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.