Skip to main content

தமிழகத்தை போதை பூமியாக்கும் ஆந்திரா – கடத்தலுக்கு பயன்படும் தமிழக சாலைகள்.

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
ganja

 

கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை (வேலூர் மாவட்டம்) யில் கடந்த 28ந்தேதி மாலை மகாராஷ்ட்டிரா பதிவெண் கொண்ட (எம்.எச்18 டபள்யூ5964) மகேந்திரா டெனால்ட்டு ரீகன் காரை தடுத்து நிறுத்தியது வேலூர் போதைப்பொருள் நுண்ணரிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையிலான டீம்.

அந்த காரில் இருந்து 74 கிலோ கஞ்சாவை கைப்பற்றியது. அதன் மதிப்பு தமிழகத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். கார் ஓட்டிவந்தனை பிடித்த விசாரித்தபோது அவுரங்காபாத் கன்னாட் தாலுககா ஹஸ்டா கிராமத்தை சேர்ந்த சுனில்அசோக் என்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களுரூவுக்கு கொண்டு செல்வதாக கூறியவனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.  

கடந்த டிசம்பர் 27ந் தேதி ஆந்திராவை சேர்ந்த ரத்தினகுமார், சாய்குமார் 110 கஞ்சா மூட்டைகளை காரில் கேரளாவுக்கு கடத்தி சென்றபோது தூத்துக்குடி போதைபொருள் தடுப்பு நுண்ணரிவு போலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதே டிசம்பர் 6ந்தேதி திண்டுக்கல்லில் ஆந்திராவில் இருந்து 150 கிலோ எடையுள்ள 15 லஞ்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி சென்ற சசிகுமார், அவரது ஆந்திரா பதிவெண் கொண்ட காரை மடக்கினர். இப்படி வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளுவர் என தமிழகம் முழுவதும் மாதம் 25 வழக்குகள் கஞ்சா கடத்தல் வழக்குகளாக பதிவாகிறது.

இதுப்பற்றி வேலூரை சேர்ந்த போதைப்பொருள் நுண்ணரிவு பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, மாதாமாதம் கஞ்சா மூட்டைகள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து கார்களில் கொண்டுவரப்படும் கஞ்சா மூட்டைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. கேரளா, கர்நாடாகாவுக்கும் ஆந்திராவில் இருந்து தமிழக சாலை வழியாகத்தான் செல்கிறது. இதனை தடுப்பது சிரமமாகவுள்ளது.

 

 

தமிழகம் – ஆந்திரா எல்லையோர மாவட்டம்மென்றால் கஞ்சா உற்பத்தி செய்வது யார் என கண்டறிந்து பிடித்துவிடலாம். இது ஆந்திராவின் உள்மாவட்டங்களாக உள்ளது, ஆந்திரா காவல்துறையின் ஒத்தெழைப்பு இதில் குறைவாக உள்ளதால் கடத்தல் ஏரியாவுக்குள் செல்ல முடியவில்லை என்றார்.

 

 

ஆந்திராவில் நமக்கு தெரிந்த சோர்ஸ்களிடம் கஞ்சா பற்றி விசாரித்தபோது, விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் கஞ்சா பயிரப்பட்டுள்ளதாக ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் விசாகப்பட்டினம் உளவுத்துறை அதிகாரிகளோ ஆந்திரா – ஓடிசா எல்லையில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தாராகொண்டா, பத்தகொண்டா, கொரூகொண்டா, பாலாபம், ஜீமடகுலா, பீடிபயலு, முஞ்சிங்குபட் தாலுக்காக்களில் தான் அதிகளவில் கஞ்சா பயிரிப்பட்டுள்ளன என அரசாங்கம்மே கூறுகிறது.

சில மாதத்துக்கு முன்பு ஆந்திராவின் எக்சைஸ் டிபார்ட்மெண்ட் போதைபொருள் தடுப்பு பிரிவின் இயக்குநர் வெங்கடேஷ்வரராவ் தலைமையிலான டீம், படேரூ, பீடபயலு, சிந்தப்பள்ளி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஏக்கர் கஞ்சா தோட்டத்தை கண்டறிந்து போலிஸ் உதவியுடன் அழித்தது. ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்ட்டிரா, டெல்லி என இந்த 5 மாநிலங்களுக்கு தான் அதிகமாக அனுப்பப்படுகிறது.

விஜயவாடா, விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் தான் கஞ்சா அதிகமாக விளைவிக்கிறார்கள். அது நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதி என்பதால் காட்டுக்குள் சென்று அந்த தோட்டங்களை அழிக்க முடியவில்லை என்கிறது போலிஸ்.

காடு, மலையென சென்று அழிக்க முடியாது சரி. காட்டுக்குள் இருந்து வெளியே வந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படும்போது பிடிக்கலாம்மே?. விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 799 கிலோ மீட்டர், வேலூருக்கு 867கி.மீ, கிழக்கு கோதாவரி மற்றும் விஜயவாடாவில் இருந்து சென்னை அல்லது வேலூருக்கு வருவதற்கும் இதே தூரம் கடந்து செல்ல வேண்டும். வழியில் சுமார் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன, இவைகளை தாண்டித்தான் வருகிறது. இங்குயெல்லாம் மடக்காமல் ஆந்திரா போலிஸ் என்ன செய்கிறது?.

கார்கள் வழியாக கடத்தப்படும் அதே அளவுக்கு இரயில்கள் மூலமாகவும் கடத்தப்படுகிறது. அதை இரயில்வே போலிஸ் நினைத்தால் தடுக்க முடியும். அவர்களும் தடுப்பதில்லை. அதற்கு காரணம் பணம். காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை கடத்தல் மாபியாக்கள் கவனிக்கும் விதத்தில் கவனித்துவிட்டு கடத்துகிறார்கள். தமிழகத்தில் சிக்குவதே இவ்வளவு என்றால் சிக்காமல் எவ்வளவு போகும் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

 

ap police


இந்தியாவின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய போதைப்பொருள் புலனாய்வு பிரிவு 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, இந்தியா முழுவதும் கஞ்சா கடத்திய வழக்கு மட்டும் 3507 பதிவாகி 1,11,222 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 2,94,347 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிக வழக்குகள் பதிவாகும் போதைப்பொருள், கஞ்சா தான். கஞ்சாவுக்கு அடுத்த இடத்தில் விலை அதிகமான ஹெராயின், ஓபியம் போன்றவை உள்ளன. கஞ்சா அதிகம் உற்பத்தியாகும் பகுதி என அது ஆந்திராவையே குறிப்பிடுகிறது.

ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழகம், கேரளாவுக்கு கொண்டும் போய் விற்கப்படும் கஞ்சா 50 கிராம் பாக்கெட் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திராவில் வாங்கப்படும் ஒருகிலோ கஞ்சாவின் விலை 100 முதல் 200 ரூபாய் என்கிறார்கள்.

தமிழகத்தை கஞ்சா போதைக்கு அடிமையாக்குகிறார்கள் ஆந்திரா போதை பொருள் மாபியாக்கள். அதை கண்டுக்கொள்ளாமல் உள்ளது ஆந்திரா அரசாங்கம். தனது சொத்தான செம்மரம் வெட்டுகிறார்கள் எனச்சொல்லி தமிழக கூலி தொழிலாளர்களை சுட்டுக்கொன்றும், முறையற்ற வகையில் கைது செய்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூலி தொழிலாளர்களை சிறையில் அடைத்து வைத்துள்ளது ஆந்திரா காவல்துறை. தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்குவது ஆந்திராவில் உற்பத்தியாகும் கஞ்சா தான். அதை தமிழகம், கேரளா என கொண்டு சென்று விற்பதும் ஆந்திராக்காரர்கள் தான். அவர்களை என்ன செய்யப்போகிறது ஆந்திர அரசும், காவல்துறையும்.

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.