Skip to main content

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி! ஐகோர்ட் தீர்ப்பு!

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
co


கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரிய வழக்கில் 14 மணி நேரம் நடந்த பரபரப்பான வாதத்திற்கு பின்னர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இத்தீர்ப்பில்,  கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி அளித்தது.

 

மறைந்த திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது.  அனுமதி மறுக்கப்படவே,  உயர்நீதிமன்றத்தில் அனுமதி  அளிக்க கோரி அவசர வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கின் மீதான விசாரணையில், 

 கலைஞரே எனது வாழ்க்கை மற்றும் ஆன்மா என அண்ணாதுரையே கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது மிக முக்கியம். 65 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர் கலைஞர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கிண்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர்களின் சிந்தந்தம் வேறு. கொள்கை, சித்தாந்த ரீதியானவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது தான் சரியாக இருக்கும். காந்தி மண்டபம் அருகே கலைஞரை அடக்கம் செய்வது கண்ணியமானதாக இருக்காது.  மெரினாவில் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதி நினைவிடம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பகுதி, வழக்குகள் தள்ளுபடியால் மெரினாவில் இடம் ஒதுக்க தடையில்லை என திமுக தனது வாதத்தை வைத்தது. 

 

கலைஞர் பின்பற்றிய விதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உணர்வுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது.  அண்ணா சமாதியில் இடம் கேட்ட வழக்கில் அரசு மீது குற்றம்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது.

 

இதையடுத்து நீதிபதிகள்,  சட்ட சிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளன என்றீர்கள்.  ஆனால் இப்போது எதுவும் இல்லை.  கலைஞருக்கு இடம் ஒதுக்க சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே என்றனர். 

உடனே, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் அரசின் முடிவு செல்லாது என எடுத்துக்கொள்ள முடியாது என்று அரசு வாதிட்டது.

 

 இதன் பின்னர் நீதிபதிகள், காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை.  முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்த நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது.  முதல்வர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்யலாம் என  விதிகளில் இல்லை என தெரிவித்தனர். 

இந்த இறுதிக்கட்ட வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் தீர்ப்பை எழுதினர்.   அப்போது,  மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.