Skip to main content

சென்னை சரிப்பட்டு வராது போலிருக்கே... ஐ.டி.ரெய்டு பிரச்சனை... மாஸ்டர் படத்தை வைத்து விஜய் போட்ட கணக்கு! 

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

மிரட்டிய ஐ.டி. ரெய்டை ஒரு வழியாக சமாளித்து, "மாஸ்டர்'’படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விஜய். ஷூட்டிங்கின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டரின் வில்லன் விஜய் சேதுபதி மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து அசத்தினார் விஜய்.

விருந்தெல்லாம் அமர்க்களமாக முடிந்து "மாஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ஆயத்த வேலைகளை ஆரம்பித்த போதுதான்... விஜய்க்கு அக்கப்போரும் ஆரம்பமானது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விழாவை நடத்த அனுமதி கேட்டவுடனேயே நோ சொல்லிவிட்டது அரசு தரப்பு. அதன்பின் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி நிர்வாகத்தை தயாரிப்பாளர் தரப்பு அணுகியது. ஆனால் "பிகில்'’பட ஆடியோ விழாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதன் பின் அரசாங்கத்தால் வந்த நெருக்கடி கண்முன்னே நிழலாடியதால் சாய்ராம் கல்லூரியும் "சாரி சார்' என சொல்லி விட்டது.

 

vijay



"சென்னை சரிப்பட்டு வராது போலிருக்கே' என்ற யோசனையுடன் கோவை இந்துஸ்தான் கல்லூரிக்குப் போன போது சாய்ராம் கதை எங்களுக்கும் தெரியும் என்றது இந்துஸ்தான். ஆடியோ விழாவை நடத்துவதற்கு பலவகையிலும் மாஸ்டர் மல்லுக் கட்டுவதற்கு காரணம், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், தனியார் தொலைக் காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசும்போது, ""ஐ.டி.ரெய்டு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பதில் சொல்வார்'' என சொன்னதுதான்.

பார்த்தார் விஜய், எதுக்கு இந்தக் குடைச்சல், ஏன் இந்த அலைச்சல்... இருக்கவே இருக்கு சன் டி.வி. அவர்களிடமே பேசுவோம் என்ற முடிவுடன் கலாநிதிமாறனிடம் பேசியுள்ளார். மாஸ்டரை 27 கோடி ரூபாய்க்கு சன் டி.வி. வாங்கியிருப்பதால் கலாநிதிமாறனும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இதனால் சன் டி.வி. அருகிலேயே உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலான லீலா பேலஸில் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய ஹாலில் ஆடியோ விழாவை நடத்தி அதை நேரடி ஒளிபரப்பும் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் விஜய்.
 

vijay



அவர் நடித்த மற்ற கம்பெனி படங்களின் ஆடியோ விழாக்களுக்கு பெரும் செலவு செய்தனர். அதில் விஜய் பேசுவது ஒரு தரப்பில் பட்டையைக் கிளப்ப, இன்னொரு பக்கம் பிரச்சினையைக் கிளப்பும். தயாரிப்புத் தரப்பு பதட்டமாகும். "மாஸ்டர்' படத்தை தனது சித்தப்பாவே தயாரித்திருப்பதால் சிக்கன செலவு, ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விஜய், நேரடி ஒளிபரப்பு என்றால் போலீஸ் பெர்மிஷன் தேவையில்லை என்ற கணக்கும் போட்டுள்ளார்.

-ஜெ.தாவீதுராஜ்
 

 

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.