சென்னையை மிரட்டிய 'எம்டன்' !!!
சார்ந்த செய்திகள்
Next Story
வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்
உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Next Story
குழந்தையை மீட்க மோடி தலையிட வேண்டும்; இந்திய வம்சாவளியினர் கோரிக்கை
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாவேஷ் ஷா. இவர் ஜெர்மனியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு தாரா ஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர்களது மகள் 7 மாதக் குழந்தையாக இருக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதனுடன், அந்த நாட்டின் சட்டப்படி அவர் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவுக்கும் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அரசின் குழந்தை நலக் காப்பகத்துக்குக் குழந்தை அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர் தங்களுடைய குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்கள். ஆனால், அந்த மனுவை ஜெர்மனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 20 மாதங்களுக்கு மேலாகக் குழந்தையை மீட்கப் பெற்றோர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட்டில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.