Skip to main content

எழுந்து சென்ற பறவை நீ... -பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
lyricist velmurugan

 

 

 

எழுந்து சென்ற
பறவை நீ
கிளைகளாய் அசைகிறது
உன் ஞாபகங்கள்.

 

எழுதிக் குவித்த
பேனா நீ
முள் உடையாமலே கிடக்கிறது
மரணித்து.

 

இழுத்துப் போர்த்திய
வானம் நீ
தூறிக்கொண்டே இருக்கிறது
உன் மேகங்கள்.

 

காஞ்சிப் புரத்து
பட்டுப்புழு நீ
பாட்டொலி வீசிப் பறக்கிறது
உன் கொடிமரங்கள்.

 

காதல் பண்ணாத
கவிஞன் நீ?
எத்தனையோ காதலர்களுக்கு
உன் பல்லவிகள்.

 

வலிகள் தாங்கிய
அரசன் நீ
தொடமுடியாமல் கிடக்கிறது
உன் சிம்மாசனம்.

 

 

ஸ்டராக்கள் நிரம்பிய
மூளை நீ
ஆயிரங்களில் உறிஞ்சியது
திரைப்பாக்கள்.

 

தாயோடு வளராத
குழந்தை நீ
பாடல்களால் தாலாட்டுகிறாய்
நீண்ட இரவுகளில்.

 

பள்ளிக் கூடத்து
மாணவன் நீ
புத்ததகமும் கையுமாய்
உன் அடையாளங்கள்.

 

கண்ணுக்குக் காட்டாத
உறக்கம் நீ
இப்போது துஞ்சுகிறாய்
எண்ணற்ற செவிகளில்.

 

 

 

 

 

 

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்துவின் இறுதி அஞ்சலி (படங்கள்)

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

 

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் ‘குணசேகரன்’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.