Skip to main content

யாரை வேண்டுமானாலும் சோதனை பண்ணலாமா?  வருமான வரி சோதனை விதிமுறைகள்...

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
it raid

 

 
 
நேற்று தமிழகத்தின் பரபரப்பு,   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரி துறை சோதனை  நடந்திருப்பது தான். இதற்கு காரணம் குட்கா வழக்கு. பொதுவாகவே வருமானவரி சோதனைகள்  மத்தியில்  ஆளுபவர்கள் கைகாட்டும் இடத்திலேயே நடக்கும். சோதனை செய்யப்படுபவர்கள் தூயவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் சோதனை செய்யப்படும் நேரம்தான் சந்தேகத்தை கிளப்புகிறது. ஹெச்.ராஜாவை விமர்சித்ததும் விஷால் அலுவலகத்தில் சோதனை, எடப்பாடி அணிக்கு எதிரான தினகரன் உறவினர்கள் அலுவலகத்தில் சோதனை  என...    ஒருவரை மிரட்டவும், எதிர்ப்பவரை அடக்கவுமே இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும், எப்போது வேண்டுமானாலும் சோதனை மேற்கொள்ள உரிமையுள்ள  வருமானவரி  துறை,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும்  எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சோதனை நடத்த வேண்டும். ஒரு வருமான வரி துறை சோதனை எப்படி ஆரம்பித்து, எப்படி முடியும் படிப்படியாக இதோ.
 

 

 

 
ஒரு முழுமையான ஆவண தயாரிப்பு மற்றும் குழு தயாரிப்புக்குப்பின் குறித்த இடங்கள் அனைத்திற்கும்  ஒரே நேரத்தில் அதிகாரிகள் செல்வர். முதலில் தங்களை குறித்த விளக்கங்கங்களை கூறி தெளிவுபடுத்திக்கொள்வர். பின் அந்த இடத்தில் தேவையான மருத்துவ சேவையை தயார்படுத்திக்கொள்வர். அலைபேசி, தொலைபேசி என அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களையும் துண்டித்துவிட்டு சோதனையிட தொடங்குவர். ரொக்கம், நகை, பத்திரங்கள், தாள்கள் ஆகியவற்றை சோதனையிட்டு அங்கிருப்பவர்களின் வாக்குமூலங்கள் மற்றும்  சரியான ஆவணங்கள், ஆவணங்கள்  இல்லாத  ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவர். நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். 
 
 

 

 

 
வருமான வரி துறை சோதனை தொடங்குவது  சூரியன் உதித்த பின்னர் தான்  நடக்க வேண்டுமென்பது விதி. வருமான வரி துறை அதிகாரிகள் நம்மை சோதனை செய்வதற்கு முன், சோதனை செய்யப்படுபவர்கள்  அவர்களின்  வாரண்ட் மற்றும் அது சார்ந்த வெரிஃபிகேஷன்'  ஆவணம் ஆகியவைகளில் உள்ள நாள், இடம் ஆகியவற்றையும், அடையாள அட்டைகளையும் சோதனை செய்ய உரிமை உண்டு. அதில் ஏதும் சந்தேகமிருப்பின் வருமான வரி துறைக்கு தொடர்புகொண்டு விசாரித்துக்கொள்ளலாம். அதன்பின் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் எவ்வித தயக்கமுமின்றி வழங்க வேண்டும். தனக்கு தேவையான உணவை தேவையான நேரத்திற்கு வழங்கவும், சோதனை நடக்கும் இடத்திற்குள்ளேயே உலாவவும், ஆவணங்கள் குறித்து விளக்கம் தரவும், பெண்களை பெண் அதிகாரிகளை கொண்டு விசாரிக்க சொல்லவும், புத்தகப்பையின் சோதனைக்குப்பின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்பதெல்லாம் வருமான வரி சோதனையின் விதிமுறைகள்.  உங்கள் பட்டய கணக்காளர்(C.A), வழக்குரைஞர்கள் ஆகியவர்களை அழைக்கலாம். இதுபோன்ற இன்னும்  சில விஷயங்களும்  நமது உரிமைகள்.
 
 
கணக்கில் வராத சொத்துக்களாக இருந்தாலும் 250கிராம் தங்கம் திருமணமாகிய பெண்ணும், 150 கிராம் திருமணமாகாத பெண்ணும், 100 கிராம் ஆணும் வைத்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள், விளக்கமளிக்கப்பட்ட பணம், வியாபாரத்திற்காக வாங்கப்பட்ட பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்படக்கூடாது. 
 

 

 

 
எல்லா வருமான வரி சோதனைகளுமே யாரோ ஒரு மூன்றாம் நபர் கொடுக்கும் தகவல் மூலமே நடக்கிறது. அந்த மூன்றாம் நபராக  பெரும்பாலும் மத்திய அரசே  உள்ளது.
 
 
 
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“திருமாவளவனின் வெற்றியைத் தடுக்க தேர்தல் அலுவலகத்தில் சோதனை” - விசிக குற்றச்சாட்டு

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Vck allegations Raiding election office to prevent Thirumavalavan victory

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை.  இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.

vck

இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.  இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்