Skip to main content

போன் செய்தா எடுக்காதீங்க... எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று விடாப்பிடியாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெருக்கடி ஒருபுறம், "எனக்கும் மத்திய அமைச்சர் பதவி வேண்டும்' என வைத்தியலிங்கமும் தம்பிதுரையும் தனித்தனியாக முரண்டுபிடிப்பது மறுபுறமென்றால்..., காலியாகும் மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவியை குறிவைக்கும் அ.தி.மு.க.வினர். போதாக்குறைக்கு அக்கிரிமென்ட்படி கேட்கும் பா.ம.க., ஆர்டர் போட்டு கேட்கும் பா.ஜ.க. என சுற்றிச் சுற்றி உரலைப்போல் இடிபடும் முதல்வர் எடப்பாடி எது வந்தாலும் வரட்டும் ஆனால் ஆட்சியை மட்டும் விட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். டெல்லி கவலையை விட இப்போது பெரிதும் எடப்பாடியை வாட்டுவது தி.மு.க.வின் "பாலாஜி ஆபரேசன்' தானாம்.

 

admk



நமது நக்கீரனில் "தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்' என விரிவாக எழுதியிருந்தோம் அதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உளவுத்துறை மூலம் எடப்பாடி ரகசியமாக கண்காணிப்பதையும் பட்டியல் போட்டுக் கூறியிருந்தோம், அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே வெளியிடும் ரகசிய தகவல்கள்தான் இது.

அது என்ன "பாலாஜி ஆபரேசன்?'

பாலாஜி ட்ரீட்மெண்ட்படி சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை என 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அந்த பாலாஜியிடம் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள்'' என ரகசிய திட்டத்தை உடைத்து நம்மிடம் பேசினார் கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். அவரை தொடர்ந்து பேச வைத்தோம்...

 

 

dmk



அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த மூத்த தலைவர்களனான சு.முத்துச்சாமி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். என பல பேர் இருந்தாலும் இப்போதைய அ.தி.மு.க. நிர்வாக அமைப்பின் பலம், பலவீனம் என்ன என்பதை தெரிந்ததோடு யாருக்கு என்னென்ன தேவைகள் என்பதை அவர்களின் ஜாதகத்தோடு லிஸ்ட் எடுத்து தூண்டில் போடமுடியும் என்றால் அது அரவக்குறிச்சியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

 

admk



அவர்தான் இப்போது தி.மு.க.வில் தொடர்பில்லாத ஒரு குழுவுடன் வெளிப்படையாக இறங்கியுள்ளார். இது மாநில உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது அவர்கள் வைத்த பெயர்தான் "பாலாஜி ஆபரேசன்' என்பது. மேற்கு மற்றும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சின்னம்மா சசிகலா உத்திரவுப்படி எங்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துள்ளார். ஏன் இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடிக்கும் பல பஸ் ரூட் கொடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பஸ் ரூட் பெற்றுள்ளோம். அந்த வகையில் செந்தில் பாலாஜியுடன் மிகநெருக்கமான தொடர்பு எங்களில் 95 சதவீதம் பேருக்கு உண்டு. இப்போது எங்க எம்.எல்.ஏ.க்கள் பலர் கேட்பது இந்த ஆட்சியுடன் எங்களின் அரசியல் வாழ்வு முடியக்கூடாது என்பதுதான்.


 

 

admk



சிலருக்கு அமைச்சர் ஆசை, சிலருக்கு கட்சியில் மா.செ. போன்று வெயிட்டான பதவி வேண்டும் என்பது. மேலும் சிலரை பொருளாதார ரீதியாக உயர்வை ஏற்படுத்துவது. இந்த மூன்றுக்குள்தான் எல்லோரின் மொத்த தேவையும் அடங்குகிறது. பாலாஜி ஆபரேசனில் இரண்டுசுற்று பேச்சு முடிந்துவிட்டது. அடுத்தது ஒரே சுற்றுதான். இதுவரை நாங்கள் கட்டியது பழைய வேட்டியாக மாறும். புதிய கரைபுடன் புதிய வேட்டி கட்டும் நிலை வரும்...'' என்ற அவர் ""சார் போன வாரம் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் வந்தது. "பாலாஜி போன் செய்தா எடுக்காதீங்க... உங்கள் தேவைகள் நிறைவேறும்'னு சொன்னாங்க. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ரெண்டு நாளைக்கு ஒருமுறை போன் செய்து "ஒரே மாதம் பொறுங்க கூவத்தூரில் கிடைத்ததுபோல் அதே மடங்கு உங்களுக்கு கிடைக்கும்'னு சொல்றாங்க. எங்களில் பலர் எதிர்பார்ப்பது பணம், பொருள் அல்ல... அடுத்தடுத்த முறையும் நாங்கள் பதவி உள்ள அரசியல்வாதிகளாக நடமாட வேண்டும் என்பதுதான்'' என அந்த மூத்த எம்.எல்.ஏ. வெளிப்படையாகவே பேசினார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதே கொங்கு மண்டலம் நெருக்கடியை உருவாக்குகிறது.
 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.