Skip to main content

திமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர் வழங்கப்படுமா?

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

கொள்கை சார்ந்த இயக்கமான திமுக, தனது கொள்கைளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க மிகப்பெரிய பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது.

 

arignar anna


 

திமுகவின் பேச்சாளர்கள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதை இருந்தது. தமிழகம், இந்தியா, உலகம் என்று அவர்கள் புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

 

திராவிடர் கழகத்தில் பெரியாரின் சீடர்களாய் கொள்கைகளை மேடைகளில் முழங்கிய அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலக அரசியலை தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். திமுக பொதுக்கூட்டங்களை மாலை நேரத்து பள்ளிக்கூடங்கள் என்று அண்ணாவும் கலைஞரும் கூறியிருக்கிறார்கள்.

 

தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் தங்களை பேச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக அண்ணா உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

 

திமுகவின் முன்னணி பேச்சாளர்கள் தங்களுடன் இளம் பேச்சாளர்களையும் வளர்த்து விட்டார்கள். திமுகவில் இலக்கிய அணி சார்பில் பேச்சாளர்களை கண்டுபிடித்து ஊக்குவித்தார்கள். தலைமைக்கழகம் சார்பில் பேச்சாளர் பயிற்சி பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படும்.

 

திமுகவின் உடன்பிறப்புகளுக்காக மட்டுமின்றி, கழகத்தின் பேச்சாளர்களுக்காகவும்தான் கலைஞர் முரசொலியில் கடிதங்களை எழுதினார். அவருடைய கடிதங்கள் எதைக் கோடுகாட்டுகிறதோ அதைக் குறித்தே பேச்சாளர்கள் தமிழகம் முழுவதம் பேசுவார்கள். தொலைக்காட்சி மீடியாவும், மொபைல் போன்களில் அன்றாட செய்திகளும் விமர்சனங்களும் வந்தபிறகு கூட்டம் கேட்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு தவறான பார்வை உருவாக்கப்படுகிறது.

 

இதையே காரணம்காட்டி திமுக சார்பில் அரசியல் பொதுக்கூட்டங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தலைமையின் கடமை. மீட்டிங் இருந்தால்தான் ஈட்டிங் என்று முன்னணி பேச்சாளர்கள் கூறுவது உண்டு.

 

பொதுக்கூட்டத்துக்கு அதிக செலவாகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அந்த அளவுக்கு கொண்டு சென்றது யார்? மாவட்டச் செயலாளர்கள்தான். எளிமையான மேடைகள் திமுகவின் அடையாளமாக இருந்தது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஆடம்பரச் செலவுகளை அதிகமாக வைக்கிறார்கள். வளைவுகள், பேனர்கள், மாலை மரியாதைகள் என்று செலவு அதிகமாவதால்தான் கூட்டங்களை அடிக்கடி நடத்த முடிவதில்லை என்கிறார்கள்.


 

kalaignar

 

மாவட்டங்களின் பல பகுதிகளிலும் அடிக்கடி கட்சிக் கூட்டங்களை நடத்துவதுதான் கட்சியின் இருப்பைத் தக்கவைக்கவும், கட்சிக்காரர்கள் அடிக்கடி சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். திமுகவின் வேறு எந்தத் தலைவர்களைக் காட்டிலும் அண்ணாவுக்கும், கலைஞருக்கும்தான் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் நெருக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் கலைஞர் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். அதற்கு அவரே காரணமும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு கூட்டத்திற்கு போகும்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்னும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் அந்த பகுதியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசுவாராம் கலைஞர். மேடைக்கு பின்னேயும், மேடையிலும் அவர்களுடன் கலைஞர் பகுதிப் பிரச்சனையை கேட்டுத் தெரிந்துகொண்டு தனது பேச்சில் அந்தப் பிரச்சனையை இணைப்பாராம். அதன்மூலம் அந்தப் பகுதி கட்சிக்காரர்களின் மனதுக்கு நெருக்கமாவார். இதுதான், அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சியினரின் ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது எனக் கூறப்படுவதுண்டு.

 

கலைஞரின் இந்தச் செல்வாக்கைக் கூட ஏற்க மறுத்து, ஏதோ எம்ஜியார் ஆதரவால்தான் கலைஞருக்கு கட்சியினரின் ஆதரவு கிடைத்ததாக திசைதிருப்பும் பேர்வழிகள் அப்போதும் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். எம்ஜியாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தக் காலத்திலும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

 

சரி அதுபோகட்டும், இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதான். திமுக தனது மாலை நேரத்து பள்ளிகளை புனரமைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்ற திமுக பேச்சாளர்களின் குமுறலை பதிவு செய்யத்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தனது சீர்திருத்த நடவடிக்கைகளில் இதையும் இணைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.