Skip to main content

அயனாவரம் சிறுமி ‘வன்புணர்வு’!  உண்மையை ஒத்துக்கொண்ட அந்த நான்கு பேர்!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
c321


சென்னை அயனாவரத்தில் அப்பார்ட்மெண்டில் வசித்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதான 17 பேரில் நான்கு பேர் பல்வேறு சூழல்களில்  ‘பாலியல் வன்புணர்வு’  செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடந்த ஜூலை 15 ந் தேதி சிறுமியின் தாய் கமிஷனர் அலுவலகத்தில் எழுதிக்கொடுத்த புகாரின்படி அதிரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, அபார்ட்மெண்டில் வேலை செய்துவந்த லிஃப்ட் ஆபரேட்டர், ப்ளம்பர், செக்யூரிட்டி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தார். 
 

அதற்குப்பிறகு, சிறுமிக்கு அரசு கே.எம்.சி. மருத்துவமனையில் இரண்டுமுறை உடல்-மன ரீதியான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. தடயங்களை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 17 பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறது காவல்துறை.

 

​    ​child


 

இதில், ஒரு சிலர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று வாக்குமூலம் கொடுத்ததோடு சிறையில் தற்கொலை செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், அயனாவரத்தை சேர்ந்த லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், கொளத்தூரைச் சேர்ந்த ப்ளம்பர் சுரேஷ், செக்யூரிட்டி அபிஷேக் உள்ளிட்டவர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உண்மைதான் என்று தற்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். 
 

மேலும், இவர்களுடன் இணைந்து யார் யார் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்பதை விசாரித்துக்கொண்டிருக்கும் காவல்துறையோ, “சிறுமியின் பெற்றோர் வளர்ப்பு பெற்றோர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரித்து அறிக்கை கொடுக்கவேண்டிய குழந்தைகள் நலக்குழுமத்திடமே சிறுமியை பேசவிடாமல் தடுத்துவிட்டார் அப்பா. அதனால், இச்சிறுமியின் வளர்ப்பு  பெற்றோர்களிடமும் விசாரணை நடத்த இருக்கிறோம்” என்கிறார்கள்.
 

இதுகுறித்து, அயனாவரம் மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவை தொடர்புகொண்டபோதும், மெசேஜ் அனுப்பியபோதும் லைனில் வரவில்லை. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ரவிக்குமார் 20 வருடங்களுக்கு முன்பே தனது வீட்டில் குடியிருந்த தம்பதியின் 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ததையும் அது ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் ஆகி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள் என்பதையும் நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியை சீரழித்த கொடூரன்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.     
 

 

 

 


                -

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.