Skip to main content

எதற்காக இத்தனை எதிர்ப்பு? அத்வானி ரதயாத்திரை - ஒரு ஃபிளாஷ்பேக்  

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

தங்க நிறத்தில் ஜோடிக்கப்பட்ட நவீன ரதத்தை சுற்றி காவிக் கொடிகள் பறக்க, 'ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்ப வேண்டும், ராமராஜ்யத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும்' போன்ற முழக்கங்களை முழங்கிக்கொண்டிருந்தது அந்த கூட்டம். அவர்களின் அட்டவணைப்படி, அயோத்தியில் ஆரம்பித்து ஆறு மாநிலங்கள் வழியாக வந்து, கடைசியில் கேரளாவிலிருந்து நெல்லை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, இராமேஸ்வரத்தில் அவர்களின் ரத யாத்திரையை முடித்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர்.

 

radhayathra



இவர்கள் தமிழக எல்லைக்குள் வருவதற்கு முன்பு ஐந்து மாநிலங்களை கடந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு  எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவே இல்லை. ஆனால் தமிழகத்துக்குள் நுழையப்போகும் நேரம் நெல்லையில் எதிர்ப்புகள் வலுவாகியது. நேற்று இரவில் இருந்து இந்த ரதயாத்திரையை எதிர்த்து, தடுக்கக் கிளம்பிய பல்வேறு கட்சித்  தலைவர்கள் திருமாவளவன், வேல்முருகன்,  ஜவாஹிருல்லா  போன்றவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், காவலர்கள் இவர்கள் வரும் வழிகளிலேயே மடக்கிப்பிடித்தனர். பிரச்சனைகள் வலுவாக கூடும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எதற்காக இத்தனை எதிர்ப்பு? ஏற்கனவே நடந்த பாஜகவின் புகழ்பெற்ற ரதயாத்திரையைப் பற்றித் தெரிந்தால் இதற்கு விடை கிடைக்கும். 

ரத யாத்திரை என்பதை பாஜக ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஆயுதத்தை வைத்துதான் பாஜக வளர்ந்தது. இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்தவர் எல்.கே.அத்வானி. சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு மேடையில் அத்வானியை மதிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டார். இப்பொழுது அவர் மாணிக்கமாக இருக்கலாம், அப்பொழுது அவர் பாட்ஷா. 1990ஆம் ஆண்டில் பாஜக இந்தியாவில் வலுவாக ஒரு இடத்தை பிடிக்க அயோத்தியில் இராமர் கோவில் கட்டவேண்டும் என்கிற நோக்கத்தை மக்களிடத்தில் பரப்பியது. அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ராம் ரத யாத்திரை. விஸ்வ ஹிந்து பரிஷத் என்னும் அமைப்பால் தொடரப்பட்ட இந்த யாத்திரையை முன்னின்று நடத்தியவர் அத்வானி தான். சோம்நாத்தில் ஆரம்பித்து ஒரு நாளுக்கு முன்னூறு கிலோமீட்டர் என்று பயணித்தனர். அது அவர்களின் கொள்கையை பரப்ப ஒரு ஜாக் பாட்டாக அமைந்தது, அதிலும் அவர்களது கொள்கை ஹிந்து மக்களிடையே வெறியை விதைப்பதாய் இருந்தது. நாளுக்கு நாள் சூடாக, சமூக நல்லிணக்கத்துக்கு சவால்கள் விட்டுக்கொண்டே வந்தனர். ஆனால், தமிழகத்தில் அவர்களின் தாக்கம் துளி அளவும் இல்லை. வடக்கே அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே இருந்தது. 

 

Adhvani Radhayathra



பீஹார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், எங்கள் மாநிலத்துக்குள் மதக்கலவரங்களை கொண்டு வரும் இதுபோன்ற யாத்திரைகளுக்கு அனுமதியில்லை என்று எச்சரித்தார். இதைத்தான் அத்வானியும் எதிர்பார்த்தார், ஆனால் அவர் எதிர்பார்த்ததோ அயோத்தி இருக்கும் உத்திரபிரேதசத்தில். இது பீஹாரிலேயே நடந்துவிட்டது. உள்ளே நுழைந்த அத்வானியை கைது செய்தனர். கலவரமானது, இருந்தாலும் தொண்டர்கள் ரதத்தை அயோத்திக்கு கொண்டு செல்ல நினைத்தனர். உபியிலும் தடை பிறப்பிக்கப்பட்டது. பாஜக எதிர்பார்த்ததைப் போல், தொண்டர்கள் வெறிகொண்டு பாபர் மசூதியை இடிக்க கையில் ஆயுதங்களுடன் கிளம்பிவிட்டனர். பின்னர் அதைத் தடுக்க மூன்று நாட்கள்  பாதுகாப்பு போடப்பட்டது. இதன் மூலம் தான் பாஜக என்ற ஒரு கட்சி வடக்கில் வலுவான ஒரு கட்சியாக மாறியது. வி.பி.சிங் ஆட்சியை மாற்றியது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு சவால் விடத்தொடங்கியது. 1991 பார்லிமென்ட் தேர்தலில் இவர்கள் நடத்திய யாத்திரைக்கும், பல மனிதர்களை பலிகொடுத்ததற்கும் தேர்தல் முடிவுகளில் பலன் கிடைத்தது.  இவர்களின் முழக்கமான 'ராமர் கோவிலை கட்ட பாபர் மசூதியை இடிக்க வேண்டும்' என்பதையும்  நிகழ்த்தியது. 

 

Ayodhya

பாபர் மசூதி



இப்படிப்பட்ட நோக்கத்துடன் தான் அந்த ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அது அவர்கள் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. வடக்கில் எப்படி வலுசேர்த்தார்களோ, அதே விஷயத்தைக்  கொண்டு தென்னிந்தியாவிலும் வளர்ந்துவிடலாம் என்று கணக்குப்  போடுகிறார்கள். இதுவரை இந்த யாத்திரையினால் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனாலும் எதிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. வெறுப்பு அரசியல் என்பது பாஜகவின் ஒரு ஆயுதம் என்பதை எச்.ராஜாவின் தொடர்ச்சியான ட்வீட்களிலும், பேச்சுகளிலும் தெரிந்துகொள்ளலாம். ஒரு ஆன்மீக யாத்திரைக்கு தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆன்மீகமும் அரசியலும் எப்பொழுதும் அருகருகே தான் இருந்திருக்கின்றன. ஆன்மீகமும் மதங்களும் வெறுப்பைத் தூண்டாமல் இருக்கும்வரை ஒன்றுமில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.   

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.