Skip to main content

சட்டக் கல்லூரி இடமாற்றம்! மாணவர்கள் போராட்டம்!

Published on 02/03/2018 | Edited on 03/03/2018
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்வதால், கல்லூரி அமைந்திருக்கும் பாரிமுனை பகுதியே பதட்டப் பரபரப்புக்குள்ளாகும். மாணவர்களுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“வருங்காலத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கும்..” - உச்ச நீதிமன்ற நீதியரசர் உருக்கம்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

"Divorce cases will increase in the future .." - supreme Court Judge

 

விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி உருவாக்கப்பட்டு இயங்கிவருகிறது. இதில் படித்த மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா நேற்று (20.12.2021) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கயல்விழி வரவேற்புரையாற்றினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தலைமை தாங்கி தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சட்டம் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்களுக்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனை, அதன் வாயிலாக வெளிப்படும் வார்த்தைகள் மிக அவசியம்.

 

சட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர் தொழில் மிகச் சிறந்த தொழில். ஆனால் அதில் முன்னேறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். முதன்முதலில் வழக்கறிஞராகப் பணியாற்ற வருபவர்களுக்கு சிரமங்கள் அதிகமாகவே இருக்கும். எனவே அப்படிப்பட்டவர்கள் என்னென்ன பணிகளை எப்படி எப்படி செய்ய வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடிவுசெய்ய வேண்டும். அதன் மூலம் சிறந்த வழக்கறிஞர்களாக வர முடியும், வர வேண்டும். நீதித்துறையில் சேர்ந்து உயர்நிலைக்கு வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர்.

 

இதில் பெண்களுக்காக தனியாக இடஒதிக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இங்கு மட்டும்தான் 30% சதவீதம் உள்ளது. இருந்தாலும் இது இன்னும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுடன் அவர்களால் போட்டி போட முடியும். எனவே ஒரு கனவோடு உங்கள் தொழிலைத் தொடங்குங்கள். இந்தத் தொழிலில் தர்மம் இருக்க வேண்டும், தர்மத்தை தொழிலாக செய்யக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் இளம்பெண் வழக்கறிஞர்களுக்கு சில துறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீதிபதிகளாக வர வேண்டும் என்ற கனவை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஏனென்றால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளில் 9 சட்ட கல்லூரிகளில் பெண்கள்தான் சட்டக் கல்லூரி முதல்வராக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நாளை நீதித்துறை பெருமளவு பெண்கள் கையில் இருக்கும் நிலை உள்ளது. அது சமுதாய மாற்றத்தைப் பொறுத்து நீதித்துறையும் மாறும், வழக்கின் தன்மைகளும் மாறும். இப்போதைய காலகட்டத்தில் விவாகரத்து, அதன் மூலம் குழந்தைகள் பராமரிப்பு போன்ற வழக்குகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வழக்குகள் வரும் காலங்களில் அதிகரிக்கும் நிலை உள்ளது என்பதால், அதுபோன்ற வழக்குகளைக் கையாள பெண்கள் அதிக அளவில் நீதித்துறையில் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதியரசர் சுந்தரேஷ் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பேராசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழுப்பும் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.

 

 

Next Story

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை! 

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
Trichy

 

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் சித்தாந்த் சிங். (24 வயது). இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு எல்.எல்.பி படித்து வருகிறார். 

 

கரோனோ வைரஸ் காரணமாக தேசிய சட்டக்கல்லூரி விடுமுறை விடப்பட்டு விடுதிகள் மூடப்பட்டது. இந்த கல்லூரியில் பெரும்பாலும், வெளிமாநில மாணவர்களே படித்து வருகிறார்கள். 

 

இந்த நிலையில் சித்தாந்த் சிங் என்பவர் கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி மாநகரில் மன்னார்புரம் அருகே உள்ள நடுத்தெருவில் கடந்த ஜீன் 1ம் தேதி முதல் தங்கியிருந்திருக்கிறார்.  

 

கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. ஆனால் உட்புறம் தாழ்டப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் போலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ள சித்தாந்த் சிங் முகத்தை பிளாஸ்டிக் கவரினால் மூடி முடிச்சு போட்டுக்கொண்டு தன்னை தானே மூச்சு விட முடியாமல் செய்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. 

 

உடலை கைப்பற்றிய கண்டோன்மென்ட் போலீஸ் அவருடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

வெளிமாநிலத்தில் இருந்து தேசிய சட்டக்கல்லூரியில் வந்து படிக்கும் மாணவர் ஒரு பேரழிவு காலத்தில் வீட்டிற்கு சென்று விட்டாரா என்பதை உறுதிபடுத்தாமலே இருந்ததும், கல்லூரியின் கவனக்குறைவே என்கிறார்கள். 

 

கல்லூரியில் மிக நன்றாக படிக்கும் மாணவன் என்று பெயர் எடுத்த ஒருவனின் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்று விட்டதே என்று  வருத்தப்படுகிறார்கள்.