Skip to main content

EXCLUSIVE: ஜெயித்தவரை தோற்றதாக அறிவித்த தில்லுமுல்லு தேர்தல் அதிகாரிகள்!! ஆர்.டி.ஐ. ஆதாரத்துடன் அம்பலம்!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
locla

தேர்தலில் வெற்றிபெற்றவரை தோற்றவராக  அறிவித்த தில்லுமுல்லு தேர்தல் அதிகாரிகளின் மோசடி ஆர்.டி.ஐ. ஆதாரத்துடன்  அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்...

 

தமிழகத்தில் கடந்த, 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாகிராமம், கடலூர், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, மங்களூர், மேல்புவனகிரி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 13 ஒன்றியங்களில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 27- ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. 

 

இதில், கீரப்பாளையம் ஒன்றியம் கவுன்சிலர் (மூன்றாவது வார்டு உறுப்பினர்) பதவிக்கு போட்டியிட்டார் தி.மு.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினரும் கீரப்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மனுமான த.அமுதராணி. ஆனால், அமுதராணியைவிட குறைந்த வாக்குகள் பெற்ற டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. சார்பாக போட்டியிட்ட கவிதா என்பவரை வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள் தேர்தல் அதிகாரிகள்.  

 

இதனால், அதிர்ச்சியடைந்த திமுக வேட்பாளர் அமுதராணி தேர்தல் நடத்திய அதிகாரி ஜெயக்குமாரிடம் முறையிட, லேட்டாக வந்து சொல்கிறீர்கள் என்று காரணம் காட்டி காவல்துறையினரால் வி(மி)ரட்டி அனுப்பப்பட்டார். இந்தநிலையில்தான், சக வேட்பாளரான காஞ்சனா சந்தோஷ்குமார், ஆர்.டி.ஐ. (Right To Information) எனப்படும் தகவல்பெறும் உரிமை சட்டத்தின்படி தேர்தல் வாக்குவிவரங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

  

local body election dmk candidate rti report state election commission

 

அதில்தான், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. தி.மு.க வேட்பாளர்  அமுதராணி 1172 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட  கவிதா 1066 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்று ஆர்.டி.ஐ. மூலம் ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. அதாவது, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட கவிதாவைவிட தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்ட அமுதராணி 106 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

 

இதுகுறித்து, நாம் அமுதராணியிடம் பேசியபோது, “13 ஒன்றியங்களுக்கும் சேர்மன் பதவி என்பது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான், ஏற்கனவே சேர்மனாக இருந்ததாலும் தற்போது வெற்றிபெற்றால் பெண் என்கிற அடிப்படையில் சேர்மன் ஆகிவிடுவேன் என்ற காழ்ப்புணர்ச்சியாலும், சதியாலும்தான் என்னைவிட 106 வாக்குகள் குறைவாக பெற்ற கவிதாவை வெற்றிபெற்றதாக அறிவித்திருக்கிறார்கள் என்பது தற்போது ஆர்.டி.ஐ மூலம்தான் ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.  

loccal

தேர்தல் முடிவுகள் அறிவித்த ஜனவரி-2 ஆம் தேதியே சந்தேகத்தின் அடிப்படையில் இதுகுறித்து, கீரப்பாளையம் ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெயக்குமாரிடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், வேண்டுமென்றே காலதாமதாக வந்ததாக காரணம் காட்டி கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

locla

 

ஒரு ஒன்றிய கவுன்சிலருக்கு 5 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், டிடிவி தினகரனின் அமமுகவைச் சேர்ந்தவர்கள் 12 பேர்  உள்ளே இருந்தார்கள். இதிலிருந்தே, தேர்தல் எந்தளவுக்கு நேர்மையற்ற முறையில் நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். தற்போது, தேர்தலில் எனக்கு எதிராக மோசடி நடந்திருப்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததால் திமுக மாவட்டச்செயலாளர் அவர்களுக்கும், தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். இனி, அவர்கள் எனக்கு என்ன வழிகாட்டுகிறார்களோ அதன்படி சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

 

local 2333

 

இதுகுறித்து, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியிருக்கிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சிப்பிரிவு உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ். தேர்தலில், நடந்த மோசடிகள் வெளிவந்து வெற்றி வேட்பாளரை அறிவிப்பதோடு, தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

 

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Chief Election Commissioner visits Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தமிழகம் வருகிறார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.