Skip to main content

ஏழு வயதில் தொடர் கொலை செய்த சிறுவன் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 08

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

rajkumar-solla-marantha-kathai-08

 

இன்சூரன்ஸ் நிறுவனத்தில்  நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார், சைக்கோ சீரியல் கில்லர் ஒருவன் பற்றிய தகவல்களை ‘சொல்ல மறந்த கதை’ தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

உலகின் மிக இளம் வயது சீரியல் கில்லர் இந்தியாவைச் சேர்ந்தவன். அவன் முதலில் கொலை செய்ய ஆரம்பித்தபோது அவனுடைய வயது 7. வடமாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் அவன். அவனுடைய சித்தியின் குழந்தையை அவன் முதன்முதலாக கொலை செய்தான். அதை தன்னுடைய குடும்பத்தினரிடம் அவன் ஒப்புக்கொண்டான். அவனுடைய பெற்றோரும் அதை உலகத்திடமிருந்து மறைத்தனர். அதன் பிறகு விளையாடும்போது அங்கு ஒரு பையனை இவன் கொலை செய்தான். 

 

அதன் பிறகு தொடர்ந்து கொலைகள் செய்ய ஆரம்பித்தான். போலீசும் அவனைக் குறிவைத்தது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவன் விடப்பட்டான். அங்கிருந்து வெளியே வந்த பிறகு, இப்போதும் அவன் வெளியே சுற்றிக்கொண்டு தான் இருக்கிறான். சிலருக்கு பிறவியிலேயே இவ்வாறான கொடூர குணம் இருக்கும். இதுபோன்றவர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தால் உடனடியாக மனநல மருத்துவரிடம் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். நம்மைச் சுற்றி இதுபோல் பலர் வாழ்ந்து வருகின்றனர். 

 

இதுபோன்றவர்கள் திருந்தி வாழ்வது என்பது மிக அரிதான ஒன்று. ஒருமுறை மாட்டிக்கொண்டால் அவர்கள் தங்களுடைய வழியை மாற்றிக் கொள்வார்கள். இது தவறு என்பதையே அவர்கள் உணர மாட்டார்கள். லஞ்சம் வாங்குவது தவறு தான். அது தெரிந்தும் லஞ்சம் அதிகம் பெறக்கூடிய பதவிகளை வாங்கவே பலரும் விரும்புகின்றனர். மனதுக்குள் விதைக்கப்பட்ட எண்ணங்களை மாற்றுவது மிகவும் கடினம். அந்த சைக்கோ கொலைகாரன் மொத்தம் எவ்வளவு கொலைகள் செய்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

 

பெரும்பாலும் குழந்தைகளையே அவன் கொன்றான். குடும்பத்திலேயே சைக்கோக்கள் பலர் இருக்கின்றனர். மருமகள் செய்த சமையலில் அதிக உப்பு சேர்த்து கெட்ட பெயர் வாங்கித் தர முயற்சித்த மாமியாரை நான் பார்த்திருக்கிறேன். அந்த கொலைகாரனின் தாய் அனுமார் தாயத்தை வாங்கி வந்து அவனுக்கு கட்டினார். அவனிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக ஊரில் உள்ள அனைவருக்கும் அந்த தாயத்தை கட்டுமாறு போலீஸ் ஒருவர் அவன் தாயிடம் கூறினார். போலீசாரால் ஒருவரை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது. நாம் தான் சைக்கோத்தனமாக நடந்து கொள்கிறவர்களிடமிருந்து விலகி இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

 

 


 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.