Skip to main content

சின்ன தல ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

மிஸ்டர்.ஐ.பி.எல்., சின்ன தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. அதிரடியான பேட்டிங், பெஸ்ட் பீல்டிங், பார்ட் டைம் பவுலிங் என ஒரு காலத்தில் இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் நம்பிக்கை நட்சித்திரமாகவும் வலம் வந்தவர். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன், டி20 ஸ்பெஷலிஸ்ட் என்று டி20–யில் உலக அளவில் சிறந்த வீரராக அசத்தினார். இன்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார். ஆனால் இன்றைய இந்திய அணியில் இடமில்லை. மீண்டும் இடம்பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இவருடைய வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

 

rr

 

 

முதல் ஓவரில் விக்கெட் விழுந்தாலும் சரி, இருபது ரன்களுக்கு 2 அல்லது 3 விக்கெட்கள் என அணி எப்படிப்பட்ட கட்டத்தில் இருந்தாலும் சரி, ரன் ரேட்டை குறைக்காமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதே சமயம் தன்னுடைய விக்கெட்டை எளிதாக பறிகொடுக்கமாட்டார். 

 

பொதுவாக வேகப்பந்து வீச்சில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அதிகம் அடிப்பார்கள். சிக்ஸர்கள் மிகவும் அரிதாக பறக்கும். ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை, ஆட்டத்தின் தொடக்கத்திலும் வேகப்பந்து வீச்சில் சிக்ஸர்களை சர்வ சாதரணமாக விளாசுவார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங்க்கு இணை, இவர் மட்டுமே. 

 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஐ.பி.எல்.-லில் மிகச்சிறந்த அணியாக வலம் வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சுரேஷ் ரெய்னாவின் ஆல்-ரவுண்டர் ஸ்கில்தான். இன்சைடு-அவுட், கவர் டிரைவ் ஷாட்கள் இவருடைய ஸ்பெஷல் ஷாட்கள். இவரைபோல யாரும் இன்சைடு-அவுட் ஷாட்களை எளிதாக ஆடமுடியாது. தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

 

rr

 

 

இவருடைய பீல்டிங் எப்பவும் தனி ஸ்பெஷல் தான். ஸ்லிப்பில் கேட்ச், லாங் பீல்டிங்கில் டைவ் கேட்ச், கிரவுண்ட் பீல்டிங் மூலம் ரன்களை தடுத்தல் என குறைந்தது ஒரு போட்டிக்கு 10 ரன்களையாவது  அணிக்கு சேகரித்து கொடுப்பார். பார்ட் டைம் பவுலராக அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். தோனி கேப்டன் ஆக இருக்கும் போது எதிர் அணியில் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க சுரேஷ் ரெய்னாவை அழைப்பார். பலமுறை முக்கியமான விக்கெட்களை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். 

 

ஐ.பி.எல்.-ல் இதுவரை 172 இன்னிங்க்ஸ் ஆடி 448 பவுண்டரிகள், 185 சிக்ஸர்கள் உட்பட 4985 ரன்கள் குவித்துள்ளார் ரெய்னா. பேட்டிங் சராசரி 34, ஸ்ட்ரைக் ரேட் 138. 27 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 25 விக்கெட்களையும் எடுத்துள்ளார். எக்னாமி ரேட் 7.4. பீல்டிங்கில் 95 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஒரு பீல்டராக ஐ.பி.எல்.-லில் அதிக கேட்ச் பிடித்தவர் இவர்தான். ஐ.பி.எல்.-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் ரெய்னாவுக்கு உண்டு. 

 

தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இல்லாதபோது ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல்.-லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது குஜராத் லைன்ஸ் அணியில் கேப்டனாக விளையாடினார். 2016 ஐ.பி.எல்.-லில் குஜராத் லைன்ஸ் அணியை ப்ளே-ஆப் சுற்று வரை அழைத்து சென்றார். நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல்.-தொடர்களிலும் 300 ரன்கள் எடுத்த ஒரே வீரர் ரெய்னா.  

 

rr

 

 

ஐ.பி.எல்.-ல் மட்டுமல்ல. இந்திய அணியிலும் ஏராளமான சாதனைகள் புரிந்துள்ளார். டி20-யில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உடையவர். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று பார்மேட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர். டி20 போட்டிகளில் 6000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாதான். 

 

2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த உலகக்கோப்பையில் காலிறுதி மற்றும் அரை இறுதியில் இவருடைய ரன்கள் 34*, 36*. 2015 உலகக்கோப்பையில் 1 சதம், 2 அரை சதங்கள் உட்பட 284  ரன்கள் குவித்தார். பேட்டிங் சராசரி 57. இருப்பினும் அதற்கு பிறகு இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை.  

 

சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம் பெறும் தகுதி உடையவர் என்று நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த வருடம் நடந்த டி20 தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. 24 பந்துகளில் 31,  27 பந்துகளில் 43 என அசத்தினார். பின்னர் நடைபெற்ற டி20 போட்டிகளிலும் ஓரளவு ரன்கள் குவித்துள்ளார். 

 

32 வயதான அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், உடல் தகுதி உடனும் உள்ளார். மற்றவர்களை பாராட்டுவதில் முதல் ஆளாக இருப்பார். அது பீல்டிங் அல்லது சிறப்பான பந்து வீச்சு அல்லது விக்கெட் என எதுவாக இருந்தாலும் சரி. ஈகோ இல்லாமல் செயல்படும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். விக்கெட்டுகளுக்கு இடையே அவரது ஓட்டம் இன்றும் நன்றாகவே உள்ளது. எனவே விரைவில் மிகச்சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.