Published on 29/10/2019 | Edited on 29/10/2019
வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனான ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி இடைக்கால தடை விதித்துள்ளது.
![shakib al hassan banned for two years](http://image.nakkheeran.in/cdn/farfuture/j_jb7HK8NW5Vx9rLsOUBTSgWmZJkWdViG6_Yv-Mk9X8/1572356269/sites/default/files/inline-images/fbhf.jpg)
வங்கதேச அணியின் மிகசிறந்த ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹஸன் அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் 2 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் போது ஷகிப் அல் ஹசனை சூதாட்டகாரர்கள் அணுகியதாகத் தகவல் வெளியான நிலையில், இடைத்தரகர்கள் தன்னை அணுகியது தொடர்பாக உரிய தகவல் அளிக்கவில்லை என கூறியுள்ள ஐசிசி, அதற்கான தண்டனையாக இந்த தடையை விதித்துள்ளதாக தெரிகிறது.