Skip to main content

ஆண்மைக் குறைவை சரி செய்யும் புடலங்காய் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Snake gourd to cure impotence - explained by Ayurvedic doctor Sugandan

 

புடலங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.

 

புடலங்காயில் பேராற்றல் மிகுந்த விஷயங்கள் இருக்கின்றன. நாம் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை. உடலில் உள்ள வாத நீரை எளிதாக வெளியே கொண்டு வரக்கூடியது புடலங்காய். புடலங்காயை கூட்டு செய்து சாப்பிடலாம், சாலட்டாக சாப்பிடலாம், வேக வைத்து சாப்பிடலாம், ஜூஸாக அருந்தலாம். இதில் தேங்காய் சேர்த்து உண்ணுதல் கூடாது. 50 வயதைத் தாண்டியவர்களுக்கு தசை வலி என்பது அதிகமாக இருக்கும். அவர்கள் புடலங்காயைப் பயன்படுத்தலாம்.

 

வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை புடலங்காய் சாப்பிட வேண்டும். புடலங்காயில் நமக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. உடலில் உள்ள கெட்ட நீரை புடலங்காய் வெளியேற்றும். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளை புடலங்காய் சரிசெய்யும். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் புடலங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் புடலங்காய் ஜூஸ் அருந்தலாம். இதன் மூலம் மூட்டு வலியும் குறையும். 

 

புடலங்காயை வதக்கி சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு புடலங்காய் கொடுப்பது அவர்களுடைய ஞாபக சக்தியை அதிகரிக்கும். புடலங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்யும். உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். வெள்ளரிக்காயில் இருக்கும் அத்தனை நற்பண்புகளும் புடலங்காயிலும் இருக்கின்றன. புடலங்காயை குழம்பாகவும் செய்து நாம் சாப்பிடலாம். புடலங்காய் துவையல் பலரும் செய்யக்கூடியது. புடலங்காயோடு வெள்ளரிக்காயையும் சேர்த்து பெப்பர் போட்டு சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

 

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புடலங்காயை அதிகமாகக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய கவனிக்கும் திறன் அதிகரிக்கும். அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிட்டியை இது குறைக்கும். சருமத்தைப் பாதுகாப்பதற்கும் புடலங்காய் பயன்படும். ஆண்மைக் குறைவு பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. அதற்கு பல மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். புடலங்காய் சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பிரச்சனை நீங்கும்.

 

 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.